இஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவிட்டால் அவரது செல்வங்கள் அவரது சகோதரன் மகனுக்குச் சென்றுவிடும். பணத்தின் மீது மோகம் கொண்ட அவன் தனது சித்தப்பாவைக் கொலை செய்தான். பின்னர் அவரது சடலத்தை வேறொரு இடத்தில் போட்டான். கச்சிதமாக காரியம் நடந்துவிட்டது. மறுநாள் காலை தனது சித்தப்பாவைக் காணவில்லை என நாடகமாடினான். பின்னர் அவரது சடலத்தைக் கண்டு கத்தினான். தனது சித்தப்பாவை அந்த சடலம் இருந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் கொலை ...
கட்டுரைகள்
January, 2018
-
16 January
இப்றாஹிம் நபியும்… நான்கு பறவைகளும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-11]
இப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்சியைக் கண்ட இப்றாஹீம் நபியின் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. “பல உயிரினங்களின் வயிற்றில் பிரிக்கப்பட்ட இந்த உடலை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்பதுதான் அது! இந்த எண்ணத்தோடு இப்றாஹீம் நபி அல்லாஹ்விடம், “என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டுவாயா?” என்று கேட்டார்கள். “இப்றாஹீம்! நீ நம்பவில்லையா?” என அல்லாஹ் கேட்டான். “இல்லை… இல்லை… நான் நம்புகின்றேன். இதைக் ...
-
16 January
பலஸ்தீனப் பிரச்சினையும் இஸ்லாத்தின் தீர்வும் | Article
ட்ரம்ப் அமெரிக்காவின் அவமானச் சின்னம்! பொது இடத்தில் பெண்களுடன் ஆபாசமாகவும் அசிங்கமாகவும் நடந்து கொள்ளும் இயல்பு கொண்டவர். இஸ்ரேலும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொண்ட கள்ளக் காதலில் கருத்தரித்த ஈனப் பிறவி! சட்டவிரோத இந்த நாட்டின் தலைநகராக ஜெரூஸலத்தை அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். இவரின் அநியாயமான, அடாவடித்தனமான சட்ட விரோத அறிவிப்பால் முஸ்லிம் உலகு கொதித்துப் போயுள்ளது. இவரின் அறிவிப்பின் மூலம் மீண்டும் பலஸ்தீனம் பற்றிய எண்ணம் மேலெழுந்துள்ளது. இது இவரின் அறிவிப்பு ஏற்படுத்திய ஒரு நல்ல மாற்றமாகும். இதே வேளை, இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை ...
-
11 January
“உஸைர் நபியும்… உயிர் பெற்ற கழுதையும்…” [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-10]
“ச்சீ-கழுதை” யாரையாவது பிடிக்காவிட்டால் இப்படித்தான் திட்டுவோம். கழுதை அதன் முட்டாள்தனத்தாலும் அதன் அசிங்கமான சப்தத்தினாலும் எல்லோராலும் வெறுக்கப்படுகின்றது. ஆனால், நான் அற்புதமான ஒரு கழுதை பற்றி குர்ஆன் கூறும் கதையை உங்களுக்குக் கூறப் போகின்றேன். உஸைர் என்றொரு நபி இருந்தார். அவர் ஒரு ஊருக்கு கழுதையில் பயணம் சென்றார். அந்த ஊர் சிதைந்து சின்னாபின்னமாகி இருந்தது. முற்று முழுதாக அந்த ஊர் அழிந்து போயிருந்தது. அந்த ஊரின் அழிவைப் பார்த்த அவர் ஆச்சரியப்பட்டார். அழிந்து போன இந்த ஊரை அல்லாஹ் எப்படித்தான் உயிர்ப்பிப்பானோ என்று ...
December, 2017
-
26 December
இப்றாஹீம் நபியும்… கொழுத்த காளைக் கன்றும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-9]
இப்றாஹீம் என்றொரு இறைத்தூதர் இருந்தார். அவர் நற்பண்புகள் நிறைந்தவர். விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது அவரின் விஷேச பண்புகளில் ஒன்றாகும். ஒருநாள் அவரது வீட்டிற்கு இரண்டு விருந்தாளிகள் வந்து ஸலாம் கூறினர். இப்றாஹீம் நபியும் அவர்களுக்கு பதில் ஸலாம் கூறி அவர்களை வரவேற்றார். வந்தவர்கள் யார், எவர்? என்ற எந்த அறிமுகமும் அற்றவர்கள். இருப்பினும் அவர்களை அன்பாக வரவேற்று இப்றாஹீம் நபி அவர்களை அரவணைத்தார். தான் வளர்த்து வந்த ஒரு கொழுத்த காளைக் கன்றை அவர்களுக்காக சமைத்து அதை அவர்களுக்கு முன்னால் உண்பதற்காக வைத்தார். அவர்கள் உண்ணாமல் ...
-
26 December
ஜமாஅத்துத் தொழுகை-2 [பிக்ஹுல் இஸ்லாம்-32]
சென்ற இதழில் ஜமாஅத்துத் தொழுகை கட்டாயக் கடமை என்று கூறுவோரின் ஆதாரங்களை அவதானித்தோம். இந்த இதழில் ஜமாஅத்துத் தொழுகை ஷர்த்தோ, பர்ளு ஐனோ அல்ல என்ற கருத்துடையோரின் ஆதாரங்களை அலசவுள்ளோம். 01. தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 25 அல்லது 27 மடங்கு சிறந்தது என ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த ஹதீஸ் ஜமாஅத்துத் தொழுகையின் சிறப்பைக் கூறும் அதே வேளை, தனியாகத் தொழுவதற்கும் நன்மை உண்டு என்பதையும் விபரிக்கின்றது. பர்ழான தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுவது ‘ஷர்த்’ என்றால் ‘ஷர்த்’ கடைப்பிடிக்கப்படாவிட்டால் அமல் பாத்திலாகி ...
-
26 December
தேனீ – அல்லாஹ்வின் அற்புத படைப்பு | Article
கட்டுரை ஆசிரியர் சகோதரி ஹுர்ரா, உண்மை உதயம் ஆசிரியர் அஷ்ஷைக் SHM இஸ்மாயில் ஸலபி அவர்களின் புதல்வியாவர். தேனீ – அல்லாஹ்வின் அற்புத படைப்பு எம்.ஐ. ஹுர்ரா (கல்-எலிய மகளிர் அரபுக் கல்லூரி) ‘மலைகளிலும், மரங்களிலும், அவர்கள் உயரமாகக் கட்டியிருப்பவற்றிலும் நீ கூடுகளை அமைத்துக் கொள்’ என தேனீக்கு உமது இரட்சகன் உள்ளுணர்வை ஏற்படுத்தினான்.’ (16:68) அல்குர்ஆனில் அல்லாஹ்-வினால் நினைவு கூரப்பட்ட அற்புதப் படைப்புக்களில் தேனீயும் ஒன்றாகும். ஆரம்ப காலங்களில் தேனீயானது பூவிலிருந்து தேனைக் கொண்டு வரும். பூச்சி என்ற நம்பிக்கையில் ‘தேனைக் கொண்டு ...
-
25 December
மகாமு இப்றாஹீம் (அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 13)
மக்காவில் இருக்கும் அத்தாட்சிகளில் ஒன்றாக மகாமு இப்றாஹீமை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மகாமு இப்றாஹீமில் இருந்து நீங்கள் தொழும் இடத்தை எடுத்துக் கொள்ளுமாறு சூறா பகராவில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ‘(கஃபா எனும்) இவ்வீட்டை மக்கள் ஒன்றுகூடுமிடமாகவும், அபயமளிக்கும் இடமாகவும் நாம் ஆக்கியதை (எண்ணிப் பாருங்கள்.) நீங்கள் மகாமு இப்றாஹீமைத் தொழும் இடமாக எடுத்துக் கொள்ளுங்கள். எனது வீட்டை தவாப் செய்வோருக்காகவும், தங்கியிருப் போருக்காகவும் ருகூஃ, சுஜூது செய்பவர்களுக்காகவும் நீங்கள் இருவரும் தூய்மைப்படுத்துங்கள் என்று இப்றாஹீமுக் கும் இஸ்மாஈலுக்கும் நாம் கட்டளை யிட்டோம்.’ (2:125) மகாமு இப்றாஹீம் ...
-
25 December
யூனுஸ் நபியும்… மீனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-8]
யூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். யூனுஸ் நபி சிலை வணக்கம் கூடாது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று போதித்தார். அந்த மக்கள் நபியின் போதனையை ஏற்கவில்லை. எனவே, உங்களுக்கு அழிவு வரும் என்று எச்சரித்து விட்டு ஊரை விட்டும் யூனுஸ் நபி வெளியேறிவிட்டார். ஒரு நபி தனது ஊரை விட்டும் வெளியேறுவதென்றால் அல்லாஹ்வின் கட்டளை வர வேண்டும். யூனுஸ் நபி தனது ...
-
25 December
இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் எதிர்கொள்ள வேண்டிய முறையும்!! (கப்பலைக் காக்க கடலில் கொட்டித்தான் தீர வேண்டும்.) | கட்டுரை
உண்மை உதய ஆசிரியர் பக்கக் கட்டுரை. வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்தே வருகின்றது. சோதனைகளும், வேதனைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு புதிதல்ல. சோதனைகள் வாட்டி வதைத்தாலும், துன்பங்களும் துயரங்களும் துரத்தித் துரத்தி வந்தாலும் சோர்ந்து போகாமல் வாடி வதங்கிவிடாமல் தலை நிமர்ந்து நிற்பது அல்லாஹ்வின் அருள் மாத்திரமே என்பது தெளிவாகும். முஸ்லிம் சமூகம் அடுத்தவர்களால் சீண்டப்படும் வேளைகளில், உலமாக்கள் மற்றும் சமூக முன்னோடிகள் அவர்களைப் பொறுமையாக இருங்கள், துஆ செய்யுங்கள் என்று போதிப்பர். இதைத்தான் அவர்கள் செய்யவும் முடியும். அடுத்து சட்ட ...
Ismail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்