Category: கட்டுரைகள்

  • குர்ஆன் விளக்கக் குறிப்புகள்

    “இன்னும், அவன் ஆதமுக்கு அனைத்துப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக்காட்டி, “நீங்கள் உண்மையாளர் களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான்.” (2:31) மனிதனுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான் என இந்த வசனம் கூறுகின்றது. ஆதம்(ர), ஹவ்வா(ர) இருவரையும் பூமிக்கு அனுப்பும் போதும் என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் என்று கூறித்தான் அனுப்பப்பட்டனர். எனவே. அவர்கள் பூமிக்கு அனுப்பப்பட்ட பின்னரும் அவர்களுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டது என்பதை அறியலாம். கடவுள் நம்பிக்கையற்றவர்கள்…

  • குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றுவதில் ஸலபுகளின் வழிகாட்டல்

    சமூக அந்தஸ்த்து அற்றவரையும் மணமுடிக்க சம்மதித்த பெண்: ஜுலைபீப்(வ) அவர்கள் அந்தக் கால மக்கள் மத்தியில் சமூக அந்தஸ்த்து அற்றவராகக் கருதப்பட்டவராவார். எனினும் இஸ்லாத்தில் இவர் சிறப்புப் பெற்ற ஒரு ஸஹாபியாவார். இவர் ஒரு போரில் ஏழு காபிர்களைக் கொலை செய்து பின்னர் ஷஹீதானார். ஜுலைபீப்(வ) அவர்களின் சிறப்பு என்ற பாடத்தில் ஸஹீஹ் முஸ்லிமில் இது குறித்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. “நபி(ச) அவர்கள் ஒரு அன்ஸாரியிடம் உங்களது மகளை ஜுலைபீப்(வ) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கின் றீர்களா? எனக்…

  • உலகை ஆளும் ஊடகம்

    ஊடகம்தான் இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று கூறும் அளவுக்கு ஊடகங்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுவிட்டன. உலக ஊடகங்கள் அனைத்தும் யூதர்களின் கையில் இருப்பதால் தாம் நினைத்த திசையில் உலகத்தை இழுத்துச் செல்ல அவர்களால் சாத்தியமாகியுள்ளது. மக்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கு ஏற்ப அவர்கள் தகவல்களை வழங்கி வருகின்றனர். “தெரிவிப்பது நாங்கள்; தீர்மானிப்பது நீங்கள்” என ஊடகங்கள் கூறினாலும் மக்கள் எப்படித் தீர்மானிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கின்றார்களோ அதற்கு ஏற்பவே செய்திகள்…

  • மிம்பர் மேடைகள் உயிரோட்டமாகட்டும்…

    அழைப்பாளர்களுக்கு!,… மிம்பர் மேடைகள் உயிரோட்டமாகட்டும்… தஃவாப் பணியில் குத்பாக்களின் பங்கு மகத்தானதாகும். முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாஹ் தந்த மிகப்பெரும் ஊடகமாகவும் அது திகழ்கின்றது. ஒரு இடத்தில் ஆயிரம் பேரைச் சேர்க்க வேண்டும் என்றால் பல்லாயிரம் விளம்பரங்கள் செய்ய வேண்டும். ஆனால் எந்த விளம்பரமும் இன்றி முழு முஸ்லிம் உலகும் அல்லாஹு அக்பர் என்கின்ற அதான் ஓசைக்கு ஒன்று கூடும் ஒரு அற்புதமான திட்டத்தை இஸ்லாம் அறிமுகப்படுத்தி அதை நடைமுறைப்படுத்துவதில் வெற்றியும் கண்டுள்ளது. ஏனைய சமூகங்களின் சமய நிகழ்ச்சிகளுக்கு…

  • ரமழானும் இரவுத் தொழுகையும்

    இஷாத் தொழுகையினது பின் சுன்னத்திலிருந்து சுபஹுடைய அதான் வரையிலான இரவு வேளையில் தொழப்படும் சுன்னத்தான தொழுகைக்கு இரவுத் தொழுகை என்று கூறப்படும். அறபியில் இதற்கு ‘கியாமுல் லைல்’ என்று கூறுவர். ரமழான் மாதத்தில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் இந்த இரவுத் தொழுகைக்குத் தனியான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்தில் இரவுத் தொழுகையின் பங்கு முக்கியமானதாகும். இரவு நேரத்தில் தமது படுக்கையை விட்டும் எழுந்து தொழும் நல்லடியார்கள் பற்றிப் பின்வரும் வசனம் இவ்வாறு சிறப்பித்துப் பேசுகின்றது. ‘அவர்களது விலாப்புறங்கள்…

  • ரைய்யான் அழைக்கிறது…

    இதோ புனித ரமழான் பிறந்துவிட்டது. சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டுவிட்டன. சுவனத்திற்கு பல வாயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்றின் பெயர்தான் “ரைய்யான்” என்பதாகும். “நாளை மறுமை நாளில் நோன்பாளிகள் எங்கே என அழைக்கப்படும். நோன்பாளிகள் எழுந்து அந்த வாயில் வழியாக சுவனம் நுழைவார்கள். அவர்கள் நுழைந்த பின்னர் அந்த வாயில் மூடப்பட்டுவிடும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: ஸஹ்லா(வ) ஆதாரம்: புஹாரி – 1896 நாளை மறுமையில் ரைய்யான் என்ற வாயில் வழியாக…

  • சமத்துவம் பேணப்பட வேண்டும்

    இலங்கைத் திருநாட்டில் வாழும் சகல இனங்களும் சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும். இன்று சில இனவாத சக்திகள் சமூக சமத்துவத்தின் சாவு மணி அடிக்கவெனத் துடிக்கின்றன. மக்களின் பக்கமும் அவர்கள் பக்கமே குவிந்துள்ளது. முஸ்லிம் தேசத்திற்குள் ஏற்பட்டுவரும் ஒரு ஏற்றத் தாழ்வை சமூக சமத்துவமின்மையை இங்கே தொட்டுக் காட்டலாம் என நான் நினைக்கின்றேன். அண்மையில் ஒரு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவு புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. கலந்து கொண்ட மாணவர்களில் சுமார் 60…

  • நெஞ்சை விட்டும் அகலாத மாறாத வடுக்கள்

    1995 இல் அதாவது 18 வருடங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையொன்றை இங்கே மீள் பிரசுரம் செய்கின்றோம். ஒரு முறை முழுமையாக வாசித்துப் பாருங்கள். இலங்கை அரசிற்கும் புலிகளுக்கு மிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் 1995 ஏப்ரல் 19 இல் கடற்படையின் “ரனசுரு” “சூரியர்” ஆகிய பீரங்கிப் படைகளைப் புலிகள் வெடிக்கச் செய்ததுடன் முறியடிக்கப்பட்டது. மூன்றாம் ஈழப் போர் ஆரம்பமானது. இத்தோடு இலங்கையில் ஓர் அரசியல் அலை ஏற்பட்டது எனலாம். பொதுமக்களில் அநேகமானோர் அன்றாட அரசியல் நிலவரங்களை அறிவதில்…

  • அழைப்பாளர்களுக்கு,

    இஸ்லாத்தின் பால், சத்தியத்தின் பால் மக்களை அழைக்க வேண்டும் என பலரும் ஆர்வம் கொள்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்! இது பாராட்டத்தக்க பண்புதான். தஃவா என்பது குர்ஆனையும் சுன்னாவையும் அடுத்தவர் களுக்குக் கற்றுக் கொடுத்து, நபி(ச) வாழ்ந்து காட்டிய அடிப்படையில் மக்களை வாழப் பழக்குவதாகும். இது மகத்தான பணியாகும். இந்தப் பணியை அல்லாஹ்வுக்குச் செய்யும் உதவியாக குர்ஆன் சிறப்பித்துக் கூறுகின்றது. இருப்பினும் அனேகமான தாஈகள் அடுத்தவர்களுக்கு இஸ்லாத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; தஃவா செய்ய வேண்டும்; என்பதில் காட்டும் ஆர்வத்தில்…

  • பிரச்சினைகள் ஏற்படும்போது குனூத் ஓதப்படுகின்றதே இது சரியா? தவறா?

    முஸ்லிம் சமூகத்திற்குப் பிரச்சினைகள் ஏற்படும்போது எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதப்படுகின்றதே இது சரியா? தவறா? பதில்: பிரச்சினைகள், சோதனைகளின் போது ஐவேளைத் தொழுகையிலும் ஓதப்படும் குனூத்துக்கு “குனூதுன்னவாஸில்” என்று கூறப்படும். இது மார்க்கத்தில் அங்கீகரிக்கப் பட்ட சுன்னாவாகவே உள்ளது. நபி(ச) அவர்கள் மக்காவில் வாழ்ந்த பலவீனமான முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக இந்த அடிப்படையில் துஆ ஓதியிருப்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் உணர்த்துகின்றன. “நபி(ச) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் “ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா” கூறிய பின்னர் குனூத் ஓதினார்கள். அதில்,…