Category: கட்டுரைகள்

  • ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன?

    ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன? பதில்: ஒரு மஸ்ஜிதில் இரண்டாம் ஜமாஅத் நடாத்தப்படுவது மூன்று வகைப்படும். முதலாவது வகை: மஸ்ஜித் பாதை ஓரத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டதாக இருத்தல். இத்தகைய மஸ்ஜித்களில் இரண்டாம் ஜமாஅத் நடாத்துவது தொடர்பில் எந்தச் சிக்கலும் இல்லை. இங்கு நியமிக்கப்பட்ட எந்த இமாமும் இல்லை. வருபவர், போகின்றவர்கள் எல்லோரும் தொழுவார்கள். இரண்டாவது வகை: ஒரே மஸ்ஜிதில் இரண்டு இமாம்களை நியமித்தல். ஒரு இமாம் ஆரம்பத்தில் தொழுவிப்பார். அடுத்தவர் இறுதி…

  • நாட்டின் நலம் காக்க நல்லுறவை வளர்ப்போம்

    பயமும் பட்டினியும் இல்லாத வாழ்வு என்பது அல்லாஹ் வழங்கும் அருள்களில் முக்கியமானதாகும். நாட்டை ஆள்பவர்களின் அடிப்படையான கடமையும் இதுதான். மக்களுக்கு அச்சமற்ற ஒரு வாழ்வை வழங்குவதும், பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி பட்டினியில்லாத சூழ்நிலையை உருவாக்குவதும்தான் ஆட்சியாளர்களின் அடிப்படைக் கடமையாகும். பலமான மக்களிடமிருந்து பலவீனர்கள் பாதுகாக்கப்படுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவதும் ஆட்சியாளர்களின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாக மிளிர வேண்டும். அபூபக்கர்(வ) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போதும் இதைத்தான் கூறினார்கள். ‘உங்களில் பலவீனமானவன் அவனது உரிமையை அவனுக்குப்…

  • சுலைமான் நபியும் இன்ஷா அல்லாஹ்வும்

    சுலைமான் நபியவர்கள் இன்ஷா அல்லாஹ் கூறியிருந்தால்….. என்று வரக்கூடிய நபிமொழியை மறுக்கும் வழிகெட்ட பிரிவினர் எடுத்து வைக்கும் வாதங்களுக்கான மறுப்புக்களைப் பார்த்து வருகின்றோம். தனது மனைவியர் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுப்பது. அவர்கள் அனைவரும் இறை வழியில் போராடுவார்கள் என சுலைமான் நபி கூறியது வேண்டுதல், பிரார்த்தனை என்ற அடிப்படையில்தான் என்பதை நாம் ஏற்கனவே விபரித்தோம். தனக்கு ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும்; அவர்கள் இறை வழியில் போராட வேண்டும் என்ற அவாவைத்தான் இந்த வார்த்தைகள் மூலம் சுலைமான்…

  • அல்குர்ஆன் விளக்கவுரை (ஆதம் நபியின் பிரார்த்தனை)

    “பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அதன் மூலம் மன்னிப்பும் கேட்டு)க் கொண்டார். அதனால் அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான்.” (அல்குர்ஆன் 2:37) மேற்படி வசனம் தவறு செய்த ஆதம் நபி அல்லாஹ்விடமே சில வார்த்தைகளைக் கற்று அதன் மூலம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னித்தான் என்று கூறுகின்றது. ஆதம் நபி கற்றுக் கொண்ட வார்த்தைகள் என்ன என்பதை அல்குர்ஆன் மற்றுமொரு இடத்தில் இப்படிக்…

  • யா அல்லாஹ்! கசக்கிப் போடுவாயாக!

    சரித்திரப் புகழ் பெற்ற ஒரு சாம்ராஜ்யத்தைச் சரித்து வெறும் சருகாக மாற்றிய மகத்தான பிரார்த்தனை இது! பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து கொள்ள ஆட்சி அதிகாரத்தை விட அல்லாஹ்வின் அங்கீகாரம் வலிமை மிக்கது என்பதை உணர்த்தும் அழகிய நிகழ்வொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஹுதைபியா உடன்படிக்கையின் பின்னர் நபியவர்கள் அண்டை நாட்டு மன்னர்களுக்குக் கடிதங்கள் மூலம் தஃவா செய்தார்கள். சிலர் கடிதத்தை மதித்தனர், பலர் மிதித்தனர். இவ்வாறே அன்றைய இரு பெரும் வல்லரசுகளில் ஒன்றான பாரசீகச் சாம்ராஜ்யத்தின்…

  • பெருநாள் தீர்மானத்தில் JASM இன் நடுநிலைப் பார்வை

    கிண்ணியாவில் காணப்பட்ட பிறை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, மற்றும் பெரிய பள்ளி நிர்வாகிகளால் நிராகரிக்கப்பட்டு 9.8.2013 பெருநாளாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நாட்டில் பல பாகங்களிலும் 8.8.2013 ஆம் திகதியன்று பெருநாள் கொண்டாடப்பட்டது. JASM தலைமையகத்திலும், கிளைகளிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தீர்மானத்திற்கு மாற்றமாகப் பெருநாள் கொண்டாடப்பட்டது. இவ்வாறு பெருநாள் கொண்டாடியவர்கள் தவ்பா செய்ய வேண்டும்; விட்டவர்கள் நோ ன்பைக் கழாச் செய்ய வேண்டும் என பத்வா வழங்கப்பட்டதினாலும் மக்களுக்கு எமது நிலையைத் தெளிவுபடுத்தும் கட்டாயம் இருப்பதினாலும்…

  • பருவ வயதை அடையாத 17 வயது அநாதைச் சிறுவன்

    அபூஹுதைபா, ஸஹ்லா தம்பதிகள் ஸாலிம் என்ற ஒரு சிறுவரைத் தமது வளர்ப்புக் குழந்தையாக வளர்த்து வந்தார்கள். ஸாலிம் என்பவர் அபூஹுதைபாவின் மகன் என்றே அழைக்கப்பட்டு வந்தார். அல்குர்ஆன் இந்த உறவு முறையைத் தடுத்த போது ஸாலிம் இளைஞராக இருந்தார். அவர்கள் ஸஹ்லா அதாவது, அவரது முன்னைய நாள் வளர்ப்புத் தாயார் சாதாரண ஆடையுடன் இருக்கும் போது உள்ளே வந்து செல்வதால் அபூஹுதைபாவின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அது பற்றி ஸஹ்லா (ரழி) அவர்கள் நபி(ச) அவர்களிடம் வினவிய…

  • மாடு அறுப்பது தடுக்கப்பட்டால்…

    பசுக்கள் மீது பாசம் இருப்பது போல் வேசம் போடும் நாசகாரக் கும்பல் ஒன்று மாடு அறுப்பதற்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிட்டு வருகின்றது. நாட்டில் பல இடங்களில் இறைச்சிக்கடைகள் தீ மூட்டப்பட்டும், மாடு ஏற்றி வரும் வாகனங்கள் தாக்கப்பட்டும் வருகின்றன. இதுவரை பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றும் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத அளவுக்கு நாட்டில் சட்ட ஒழுங்கு பேணப்படுகின்றது. இனவாத, மதவாதக் குழுக்களின் தாளத்துக்கு ஏற்ப அரசும் ஆடத் துவங்கிவிட்டதால் பெரும்பாலும் ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முன்னர் அல்லது தேர்தல்…

  • இறைவனிடம் கையேந்துங்கள்!

    இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை மளினப்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தொடரான பல இன, மத நெருக்குதல் களுக்குள்ளாக்கப்;பட்ட இலங்கை முஸ்லிம்கள் உலவியல் ரீதியில் பாரிய மன உளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கை ஒரு நல்ல நாடு. இங்கு வாழ்ந்த மக்களும் நல்ல மக்கள். இந்த நாட்டுக்கு நல்லதொரு அரசியல் சாசனம் உண்டு. இந்த அரசியல் சாசனம் இலங்கை மக்களுக்கு அளித்துள்ள நீதியான, நியாயமான உரிமைகள் விடயத்தில் அத்து மீறும் பௌத்த தீவிரவாதமும் அடிப்படை வாதமும்…

  • அழைப்பாளர்களுக்கு (For propagators)

    தஃவா பணியில் ஈடுபடுகின்றவர்கள் மீது மக்களுக்கு ஏற்படும் நல்லெண்ணம் என்பது தஃவாவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்த வகையில் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தைப் பெற்ற தாஈகளின் கருத்துக்கள் மிக விரைவாக மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. உங்களது தஃவா அதிகூடிய வெற்றியை வழங்குவதற்குப் பின்வரும் அடிப்படைகள் பெரிதும் உதவலாம். 1. இஹ்லாஸ் நாம் யாரை சத்தியத்தின் பால் அழைக்கின்றோமோ அந்த மக்கள் இவர் அல்லாஹ்வுக்காகத்தான் தஃவத் செய்கின்றார் என்று உறுதியாக நம்ப வேண்டும். இவர் புகழுக்காக அல்லது உலக ஆதாயத்திற்காக…