Tag Archives: Ismail Salafi

த மெசேஜ் ஓர் விமர்சன நோக்கு! | Anan Asmath Bin Ismail.

த மெசேஜ் ஓர் விமர்சன நோக்கு! ஆக்கம்: Anan Asmath Bin Ismail. (மகன்) நபி(ச) அவர்களின் தூதுத்துவ வரலாறு 1976 ஆம் ஆண்டு ஒரு திரைப்படமாக ‘The Message’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இதை சிரியா நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ‘முஸ்தபா அக்காப்’ என்பவர் இயக்கியிருந்தார். இப்பட உருவாக்கத்திற்கு எகிப்து, மொரோக்கோ போன்ற நாடுகள் அனுமதியும், குவைட், லிபியா ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியாக உதவுவதாகவும் வாக்களித்திருந்தன. இருந்தாலும் மக்காவிலுள்ள ‘ராபிதது ஆலமுல் இஸ்லாம்’ என்ற அமைப்பு இதற்கான அனுமதியை ...

Read More »

அனைத்தும் அவனுக்கு அடிபணிந்தவையே! [அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

“அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாததையா இவர்கள் விரும்புகின்றார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடி பணிகின்றன. மேலும் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.” (3:83) இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப தனது வாழ்வை அமைத்துக் கொள்வதாகும். இஸ்லாத்தின் வழிகாட்டலை ஒரு மனிதன் மறுக்கலாம். ஆனால், அவன் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டை மீறி விட முடியாது. விரும்பியோ விரும்பாமலோ அவன் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்பட்டே ஆக வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டை யாரும் மீற முடியாது. ஒரு மனிதன் தனக்கு தாயாக, தந்தையாக யார் வர ...

Read More »

முஹர்ரம் அல்லாஹ்வின் மாதம் | கட்டுரை.

ஹிஜ்ரி ஆண்டுக் கணிப்பின் முதல் மாதமாக முஹர்ரம் திகழ்கின்றது. இம்மாதத்தை நபி(ச) அவர்கள் ‘ஷஹ்ருல்லாஹ்’ அல்லாஹ்வின் மாதம் என்று சிலாகித்துக் கூறியுள்ளார்கள். பொதுவாக எல்லா மாதங்களும் அல்லாஹ்வின் மாதம்தான் என்றிருப்பினும் முஹர்ரம் மட்டும் ஏன் அல்லாஹ்வின் மாதம் என்று அழைக்கப்படுகின்றது என்ற ஐயம் எழலாம். எல்லாமே அல்லாஹ்வுக்குரியது என்றிருந்தாலும் ஏதாவது ஒன்று அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறப்பட்டால் அது அப்பொருளின் சிறப்பைக் குறிப்பதாகச் கொள்ளப்படும். அல்லாஹ் ஸாலிஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஒட்டகத்தை அல்குர்ஆன் ‘நாகதுல்லாஹ்’ – அல்லாஹ்வின் ஒட்டகம் என்று குறிப்பிடுகின்றது. எல்லா ஒட்டகங்களும் அல்லாஹ்வுடையதுதான். என்றாலும் ...

Read More »

முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்

     மனிதனின் ஆன்மீக உணர்வுகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்காக இஸ்லாம் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம், துல்ஹஜ் மாதம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். புனித மாதம்: இந்த மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகும். ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் ...

Read More »

மக்கா விபத்தை ஏன் அல்லாஹ் தடுக்கவில்லை?

            மக்காவில் கிரேன் விழுந்த விபத்தில் சுமார் 107 பேர் பலியானதோடு 238 பேர் காயமடைந்துள்ளனர். பொதுவாகவே முஸ்லிம்கள் அல்லாஹ்வின் விதியின் மீது நம்பிக்கை வைப்பதால் எது நடந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் என்று நம்பிவிட்டுப் போய்விடுவர். இம்முறை மக்கா விபத்தை ஏராளமான மக்கள் இணையதளங்களினூடாகவும், சமூக வலைத்தளங்களினூடாகவும் கண்ணுற்றனர். இதனால் சில மாற்று மதத்தவர்கள் அபயமளிக்கப்பட்ட பூமியான மக்கா பூமியில் அவ்விபத்தை ஏன் அல்லாஹ்வினால் தடுக்க முடியாமல் போய்விட்டது? என்ற தோரணையில் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றும் சில மாற்று மத சகோதரர்கள் ...

Read More »

மரணித்த பின் உயிர் கொடுத்து எழுப்பப்படுதல் : குர்ஆனிய்யத்

மறுமை வாழ்வு உண்டு:       மரணித்த அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவர் என்பது இறைத்தூதர்களின் போதனையில் அடிப்படையானதாகும். இறைத் தூதர்கள் மரணத்தின் பின் வாழ்வு உண்டு என போதித்த போது அக்காலத்தில் வாழ்ந்த பகுத்தறிவாளர்கள் (?) அதை மறுத்தனர். மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாக மாறியதன் பின் அவனை உயிர் கொடுத்து மீண்டும் எழுப்ப முடியுமா? இது சாத்தியமே இல்லை என மறுத்தனர். அவர்களின் இப்போக்கை அல்குர்ஆன் பல இடங்களில் தர்க்க ரீதியாகவே தகர்த்தது. அப்படி தர்க்க ரீதியாக இந்தப் பிரச்சினையை அணுகிய இடங் ...

Read More »