கட்டுரைகள்

October, 2015

  • 14 October

    நபித்தோழர்களின் விளக்கம்

    அல்குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாகும். இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளையும் வணக்க வழிபாட்டு முறைகளையும் இஸ்லாம் போற்றும் பண்பாடுகளையும் குர்ஆன், சுன்னாவிலிருந்தே நாம் பெற வேண்டும். குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்பதில் பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபடுகின்றனர். கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தனர். நவீன கால வழிகேடர்களும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி வருகின்றனர். காதியாணிகள், வஹ்ததுல் வுஜூத் பேசுவோர் ஏன், ஷPஆக்கள் கூட இந்தக் கருத்தைக் கூறுகின்றனர். குர்ஆன், சுன்னாவை அவரவர் சிந்தனைக்கும், மனோ இச்சைக்கும் ஏற்ப விளக்கி ...

  • 14 October

    மக்காவிபத்தை ஏன் அல்லாஹ் தடுக்கவில்லை?

    மக்காவில் கிரேன் விழுந்த விபத்தில் சுமார் 107 பேர் பலியானதோடு 238 பேர் காயமடைந்துள்ளனர். பொதுவாகவே முஸ்லிம்கள் அல்லாஹ்வின் விதியின் மீது நம்பிக்கை வைப்பதால் எது நடந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் என்று நம்பிவிட்டுப் போய்விடுவர். இம்முறை மக்கா விபத்தை ஏராளமான மக்கள் இணையதளங்களினூடாகவும், சமூக வலைத்தளங்களினூடாகவும் கண்ணுற்றனர். இதனால் சில மாற்று மதத்தவர்கள் அபயமளிக்கப்பட்ட பூமியான மக்கா பூமியில் அவ்விபத்தை ஏன் அல்லாஹ்வினால் தடுக்க முடியாமல் போய்விட்டது? என்ற தோரணையில் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றும் சில மாற்று மத சகோதரர்கள் துக்கம் விசாரிப்பது போல் ...

  • 12 October

    முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்

         மனிதனின் ஆன்மீக உணர்வுகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்காக இஸ்லாம் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம், துல்ஹஜ் மாதம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். புனித மாதம்: இந்த மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகும். ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் ...

  • 12 October

    மக்கா விபத்தை ஏன் அல்லாஹ் தடுக்கவில்லை?

                மக்காவில் கிரேன் விழுந்த விபத்தில் சுமார் 107 பேர் பலியானதோடு 238 பேர் காயமடைந்துள்ளனர். பொதுவாகவே முஸ்லிம்கள் அல்லாஹ்வின் விதியின் மீது நம்பிக்கை வைப்பதால் எது நடந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் என்று நம்பிவிட்டுப் போய்விடுவர். இம்முறை மக்கா விபத்தை ஏராளமான மக்கள் இணையதளங்களினூடாகவும், சமூக வலைத்தளங்களினூடாகவும் கண்ணுற்றனர். இதனால் சில மாற்று மதத்தவர்கள் அபயமளிக்கப்பட்ட பூமியான மக்கா பூமியில் அவ்விபத்தை ஏன் அல்லாஹ்வினால் தடுக்க முடியாமல் போய்விட்டது? என்ற தோரணையில் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றும் சில மாற்று மத சகோதரர்கள் ...

  • 12 October

    மரணித்த பின் உயிர் கொடுத்து எழுப்பப்படுதல் : குர்ஆனிய்யத்

    மறுமை வாழ்வு உண்டு:       மரணித்த அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவர் என்பது இறைத்தூதர்களின் போதனையில் அடிப்படையானதாகும். இறைத் தூதர்கள் மரணத்தின் பின் வாழ்வு உண்டு என போதித்த போது அக்காலத்தில் வாழ்ந்த பகுத்தறிவாளர்கள் (?) அதை மறுத்தனர். மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாக மாறியதன் பின் அவனை உயிர் கொடுத்து மீண்டும் எழுப்ப முடியுமா? இது சாத்தியமே இல்லை என மறுத்தனர். அவர்களின் இப்போக்கை அல்குர்ஆன் பல இடங்களில் தர்க்க ரீதியாகவே தகர்த்தது. அப்படி தர்க்க ரீதியாக இந்தப் பிரச்சினையை அணுகிய இடங் ...

  • 12 October

    அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகமும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளும்

    உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான அம்சங்களில் சிறுவர் து’;பிர யோகம் பிரதானமானதாகும். விபரமுள்ள பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுக்கும் மிக முக்கிய பிரச்சினை தனது பிள்ளையை எப்படிப் பாதுகாப்பது? என்பதுதான். பெண் பிள்ளைகள் வளர, வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வது போல் தாய்மார்கள் அங்கலாய்க்கின்றனர். எனினும் சிறுமியர் அளவுக்கு இல்லையென்றாலும், சிறுவர்களும் து’;பிரயோகத்துக்குள்ளாவதை பெரும்பாலான வர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், சில குடிகாரத் தந்தையரின் கோரப் பார்வையில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதே சில தாய்மார்களுக்குப் பெருத்த சவாலாக அமைந்திருப்பதுதான். எனவே, இந்தப் பயங்கரம் குறித்து ...

  • 12 October

    சுன்னத்தான தொழுகைகள் – 3 : பிக்ஹுல் இஸ்லாம்

    லைலத்துல் கத்ர் கடந்த இதழில் கடமையான தொழுகைகளுக்கு முன், பின் உள்ள சுன்னத்தான தொழுகைகள் குறித்துப் பார்த்தோம். இந்த இதழில் கியாமுல் லைல் குறித்து நோக்கவிருக்கின்றோம். ‘கியாமுல் லைல்’ – இரவுத் தொழுகை- என்பது இஷhவின் பின் சுன்னத்து முதல் பஜ்ர் வரையுள்ள நேரத்தில் தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். நடு இரவில் தொழப்படும் தஹஜ்ஜத் தொழுகையும் இரவில் தொழப்படும் வித்ர் தொழுகையும், ரமழான் காலங்களில் தொழப்படும் தராவீஹ் என அழைக்கப்படும் தொழுகையும் கியாமுல் லைல் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும். இந்த கியாமுல் லைல் ...

  • 12 October

    அவர்கள் மூட்டுகின்றார்கள்…. நாம் எரிகின்றோம்!

        சிரியாவில் கடந்த சில வருடங்களாகவே பெரும் மனித அவலங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கற்பழிப்புக்கள், கூட்டுப் படுகொலைகள், சிறுவர் மற்றும் சிறுமியர் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், சித்திரவதைகள், இரசாயன ஆயுதப் பாவனை என ஈனத்தனமான கொடூரங்களை ஆஸாத்தின் இராணுவ மிருகங்கள் நிகழ்த்தி வருகின்றன. இந்தக் கொடூரங்களின் விளைவால் பாரிய உள்நாட்டுப் போர் வெடித்து சிரியா சிதறிப் போயுள்ளது. சிரியாவின் சிறுவர்கள் மீது இரசாயனம் பாவிக்கப்பட்ட போது அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் கொஞ்சம் கொதித்து விட்டு அப்படியே அடங்கிப் போயின. சிரியாவின் கொடூரங்களுக்குப் பின்னால் ...

  • 12 October

    முத்தலாக் : அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்

    ‘(மீட்டிக்கொள்ள உரிமை பெற்ற) தலாக் இரண்டு தடவைகளே! பின்னர் உரிய விதத்தில் (அவர்களை) வைத்துக் கொள்ளலாம். அல்லது நல்ல முறையில் விட்டு விடலாம். (மனைவியர்களாகிய) அவர் களுக்கு நீங்கள் கொடுத்தவற்றில் எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. எனினும், அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேண முடியாது என அஞ்சினாலும், அல்லாஹ்வின் வரம்புகளை அவ்விருவரும் பேணமாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்கள் அஞ்சினாலும் மனைவி (தானாக விரும்பி கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து (பிரிந்து) விடுவதில் இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். ஆகவே, ...

September, 2015

  • 22 September

    சுன்னத்தான தொழுகைகள் – 02

    சுன்னத்தான தொழுகைகள் தொடரில் சுபஹுடைய முன் சுன்னத்து தொழுவது குறித்து நாம் பார்த்து வருகின்றோம். தொழுத பின்னர் வலப்பக்கமாக சிறிது சாய்ந்து படுத்துக் கொள்ளுதல்: ‘பஜ்ருடைய அதானுக்கும் தொழுகைக்கும் இடையே நபி(ச) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். இகாமத் சொல்வதற்காக முஅத்தின் அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: புஹாரி- 626, 1160 ‘நபி(ச) அவர்கள் சுபஹுடைய (சுன்னத்து) இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். நான் விழித்திருந்தால் என்னோடு கதைத்துக் கொண்டிருப்பார்கள். இல்லையென்றால் (வலப்புறம்) சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.’ ...