Tag: Ismail Salafi

  • இஸ்லாம் அழைக்கிறது – 03

    குற்றங்களைக் குறைக்கும் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மனித இனம் வெட்கித் தலை குனியத் தக்க குற்றச் செயல்கள் இன்று அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தந்தையால் கற்பழிக்கப்படும் மகள்கள், சகோதரனால் சீரழிக்கப்படும் சிறுமிகள், சிறுவர் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் துஷ;பிரயோகங்கள், பகிரங்கமாக பலர் பார்த்துக் கொண்டிருக்க நடக்கும் பலாத்காரங்கள், கொடூரமான கொலைகள், பட்டப்பகலில் படுகொலை, கொள்ளை, திருட்டு… என குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. உலக நாடுகள் அனைத்திலும் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. குற்றவாளிகளும் மனிதர்களே!…

  • சத்தியத்தை சாட்டாக்காதீர்கள் (அல்குர்ஆன் விளக்கம்)

    ‘நீங்கள் நன்மை செய்வதற்கும், (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்கும், மக்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்களது சத்தியங்களின் மூலம் அல்லாஹ்வைத் தடையாக ஆக்காதீர்கள். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்; நன்கறிந்தவன்.’ (2:224) நல்ல விடயங்களைச் செய்யமாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டு அதில் முரட்டுப் பிடிவாதத்துடன் இருப்பது கூடாது. உதாரணமாக, அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்தப் பள்ளிக்கு எந்த உதவியும் நான் செய்ய மாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டு பின்னர் உதவி செய்ய வேண்டிய தேவை வரும் போது சத்தியம் செய்துவிட்டேன்…

  • இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் – 6

    கிறிஸ்தவ உலகம் இயேசுவை கடவுள் என்று கூறுகின்றது. இஸ்லாம் இயேசுவை கடவுள் அல்ல கடவுளின் தூதர் என்று கூறுகின்றது. ‘இயேசுவைக் கர்த்தரே! என்று அழைத்தவர்கள் பரலோக இராஜ்ஜியத்தை அடைய முடியாது’ என்று சென்ற தொடரில் பார்த்தோம். இயேசுவைக் கடவுள் என்று கூறுவதற்கு அவர் கடவுளின் குமாரன் என்பதையும் கிறிஸ்தவ உலகம் ஆதாரமாகக் கூறுகின்றது. இயேசு கடவுளின் குமாரன் அல்லர், கடவுளுக்கு குமாரன் இல்லை, இயேசு கடவுளோ கடவுளின் பிள்ளையோ அல்லர் என இஸ்லாம் கூறுகின்றது. இயேசு இறைவனின்…

  • மனைவியைத் தீண்டுவதில்லை என சத்தியம் செய்தல் (அல்குர்ஆன் விளக்கம்)

    ‘தமது மனைவியருடன் உறவு கொள்வதில்லை என சத்தியம் செய்வோருக்கு நான்கு மாதங்கள் அவகாசமுண்டு. (அதற்குள்) அவர்கள் திரும்பிவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையவன்.’ ‘அவர்கள் விவாகரத்து செய்வதையே தீர்மானமாகக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்ளூ நன்கறிந்தவன்.’ (2:226-227) மனைவி மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லது மனைவியைத் திருத்துவதற்காக உன்னைத் தீண்ட மாட்டேன் என சத்தியம் செய்வதுண்டு. இதற்கு ‘அல் ஈழா’ என்று கூறப்படும். இதை நல்லதற்குப் பயன்படுத்துவது போலவே சிலர் தவறான முறையிலும்…

  • கண்ணியமிக்க இரவு..!

    ஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் “அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97ம் அத்தியாயமாக அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள இச்சூறா “லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலாக உலகின் வானுக்கு அல்குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்பட்டது. பின்னர் காலத்திற்கும், தேவைக்குமேற்ப சிறுகச் சிறுக 23 வருட இடைவெளிக்குள் முழுக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகக் கருதப்படுகின்றது. இந்த இரவில் வானவர்களும் அவர்களின் தலைவர் ஜிப்ரீல்(அலை)…

  • பெருநாள் வாழ்த்துக் கூறலாமா?

    பெருநாள் வாழ்த்துக் கூறலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. பொதுவாக ஈத் முபாரக் என்ற வார்த்தையைப் பிரயோகித்தே பலரும் வாழ்த்துக் கூறுகின்றனர். பலரும் ஒரே வார்;த்தையைக் கூறும் போது இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வது இபாதத் என்ற எண்ணம் ஏற்படுவதால் இது பித்அத் ஆகும் என சிலர் கருதுகின்றனர். சந்தோசமான நேரங்களில் வாழ்த்துக் கூறுதல் என்பது பொதுவாக மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அம்சமாகும். தபூக் போரில் பின்தங்கிய கஃப் இப்னு மாலிக்(வ) அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கிய…

  • மாதவிடாயும் பெண் கொடுமையும் (அல்குர்ஆன் விளக்கம்)

    ‘மாதவிடாய் பற்றியும் உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். ‘அது ஒரு அசௌகரியமாகும். எனவே, மாதவிடாயின் போது பெண்களை (உறவு கொள்வதை) விட்டும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் தூய்மை யடையும் வரை அவர்களிடம் (உறவுக்காக) நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்து விட்டால் அல்லாஹ் உங்களுக்கு ஏவியவாறு அவர்களிடம் செல்லுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புத் தேடுபவர்களை நேசிக்கின்றான். மேலும் தூய்மையானவர்களையும் நேசிக்கின்றான்.’ (2:222) மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான அம்சமாகும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் இழிவாக…