ஸகாத்தும்… சேமிப்பும்… [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புகள்-22]

ஸகாத்தும் சேமிப்பும்:

وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِه هُوَ خَيْـرًا لَّهُمْ‌ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِه يَوْمَ الْقِيٰمَةِ  وَ لِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏

‘அல்லாஹ் தனது அருட்கொடையிலிருந்து அவர்களுக்கு வழங்கியவற்றில் கஞ்சத்தனம் செய்வோர் அது தங்களுக்கு நல்லது என்று எண்ண வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீயதே! எதை அவர்கள் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவை அவர்களுக்கு மறுமை நாளில் கழுத்தில் வளையங்களாக மாட்டப்படும். வானங்கள், பூமி ஆகியவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். நீங்கள் செய்பவை பற்றி அல்லாஹ் நன்கறிந்த வனாவான்.’ (3:180)

இந்த வசனத்தைப் பார்த்தால் செல்வத்தை சேர்த்து வைக்கக் கூடாது என்று விளங்கலாம். நல்ல வழியில் செலவு செய்யாமல் சேர்த்து வைப்பதை இந்த வசனம் கண்டிக்கின்றது. அத்துடன் ஸகாத் கொடுக்காமல் சொத்தை சேர்த்து வைத்தால்தான் இந்தத் தண்டனைக்குரியவராவார். உரிய முறையில் ஸகாத் கொடுத்துவிட்டால் இந்த தண்டனையிலிருந்து தப்பிக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.