முஸ்லிம் உலகு
December, 2015
November, 2015
-
17 November
மாறப் போகும் உலக அரசியல்
எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அவ்வப்போது இடம் பெற்று வருவதுண்டு. உலக நடப்புக்களை அவதானிக்கும் போது ஒரு அரசியல் மாற்றத்திற்கான அத்திவாரங்கள் இடப்பட்டுவிட்டனவா என சிந்திக்க வேண்டியுள்ளது. நபி(ஸல்) அவர்களது காலத்தில் உரோம, பாரசீகப் பேரரசுகள் உலக வல்லரசுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஈற்றில் இரு பெரும் வல்லரசுகளும் இஸ்லாத்திடம் சரணடைந்தன. இவ்வாறே சென்ற நூற்றாண்டில் அமெரிக்கா, ரஷ்யா என்பன இரு பெரும் வல்லரசுகளாகத் திகழ்ந்தன. உலக நாடுகள், அமெரிக்க ஆதரவு அணி, ரஷ்ய ஆதரவு அணி, அணி சேரா நாடுகள் என பிரிந்து செயற்பட்டன. ...
October, 2015
-
14 October
மக்காவிபத்தை ஏன் அல்லாஹ் தடுக்கவில்லை?
மக்காவில் கிரேன் விழுந்த விபத்தில் சுமார் 107 பேர் பலியானதோடு 238 பேர் காயமடைந்துள்ளனர். பொதுவாகவே முஸ்லிம்கள் அல்லாஹ்வின் விதியின் மீது நம்பிக்கை வைப்பதால் எது நடந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் என்று நம்பிவிட்டுப் போய்விடுவர். இம்முறை மக்கா விபத்தை ஏராளமான மக்கள் இணையதளங்களினூடாகவும், சமூக வலைத்தளங்களினூடாகவும் கண்ணுற்றனர். இதனால் சில மாற்று மதத்தவர்கள் அபயமளிக்கப்பட்ட பூமியான மக்கா பூமியில் அவ்விபத்தை ஏன் அல்லாஹ்வினால் தடுக்க முடியாமல் போய்விட்டது? என்ற தோரணையில் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றும் சில மாற்று மத சகோதரர்கள் துக்கம் விசாரிப்பது போல் ...
February, 2015
-
3 February
தெரிந்த பேயை விட்டு விட்டு தெரியாத தேவதையை அரவணைத்த இலங்கை மக்கள்
வித்தியாசமான ஒரு தேர்தலையும், தேர்தல் முடிவையும் இலங்கை மக்கள் சந்தித்துள்ளனர். இலங்கையில் இதுவரை ஜனாதிபதியாக இருந்தவர்கள் அதிகபட்சமாக இரண்டு முறை பதவி வகித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மூன்றாவது முறையும் பதவி வகிப்பதற்காகப் போட்டியிட்டார். அவர் பதவியில் இருக்கும் போதே, இரண்டு வருடங்கள் மீதம் இருக்கும் போதே இந்தத் தேர்தல் நடந்தது. இலங்கையில் ஜனாதிபதியொருவர் போட்டியிட்டுத் தோல்வியடைந்தது இதுவே முதல் தடவையாகும். இவ்வாறு இந்தத் தேர்தலில் வித்தியாசமான பல அம்சங்கள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதியுடன் போட்டியிட்டு வெற்றிபெற்ற மைத்திரிபால சிரிசேனாவுடன் ஒப்பிடும் போது முன்னாள் ஜனாதிபதியே ...
January, 2015
December, 2014
-
1 December
ஊடக பயங்கரவாதம் – தம்மாம்
இடம்: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி ஸ்டூடியோ தம்மாம் Part-01 Part-02 Part-03
November, 2014
-
25 November
முஸ்லிம்களின் அரசியல் இலக்கு
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படா விட்டாலும் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் தேர்தல் காய் நகர்த்தல்களில் முழு மூச்சுடன் கவனம் செலுத்தி வருகின்றனர். அண்மையில் நடந்த தேர்தல்கள் குறிப்பாக, ஊவா தேர்தல் அரசின் வாக்கு வங்கி சரிந்து வருவதைத் தெளிவாக உணர்த்தியது. இதனால் திடீரென ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஆளும் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. இதே வேளை, ஊவா தேர்தல் பிரதான எதிர்க்கட்சிக்குப் பெரும் உற்சாகத்தையூட்டியுள்ளது. முயற்சித்தால் கூட்டணி அமைத்தால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்ற பெறலாம் என்ற ...