மதங்கள் ஆய்வு

April, 2017

  • 24 April

    பைபிளில் முஹம்மத் (06) – பைபிளில் பத்ர் யுத்தம் | கட்டுரை.

    இயேசு அல்லாத மற்றுமொரு இறைத் தூதரைப் பற்றி பைபிள் முன்னறிவிப்புச் செய்துள்ளது. அந்த இறைத்தூதர் இஸ்மாயீல் நபியின் பரம்பரையில் அறபு நாட்டில் இருந்து வருவார் என்றும் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. பைபிளில் வந்துள்ள முன்னறிவிப்புக்கள் இயேசுவைப் பற்றியே பேசுகின்றன என கிறிஸ்தவ உலகம் கூறி வருகின்றது. ஆனால், இஸ்மாயீல் நபியின் பரம்பரையில் அறபு நாட்டில் வருவார் என்று கூறப்பட்ட இறைத்தூதர் முஹம்மது நபியே என்பதை இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமல் உறுதியாகத் தெளிவுபடுத்தி வருகின்றோம். இந்தத் தொடரில் மற்றும் சில சான்றுகளைப் பார்க்க இருக்கின்றோம். நபி(ச) அவர்கள் ...

March, 2017

January, 2017

  • 23 January

    இன நல்லுறவுக்கு இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் | Puttalam | 2017.

    ”இன நல்லுறவுக்கு இஸ்லாம் காட்டும் வழிமுறைகள்” ”INA NALLURAVUKKU ISLAM KAATUM WALIMURAIGAL” AshShk S.H.M Ismail Salafi JASM Islamiya manadu puttalam 14/01/2017.

  • 15 January

    முஹம்மது நபியும் மாற்று மதத்தவர்களும் | Article.

    அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர் உண்மை உதயம்) நபி(ச) அவர்கள் இஸ்லாத்தின் போதகராவார். இஸ்லாத்தை பயங்கர வாதமாகவும் தீவிரவாதமாகவும் சித்தரிப்பவர்கள் முஹம்மது நபியைக் கொடூரமானவராகச் சித்தரிக்க முற்படுகின்றனர். நபி முஹம்மத்(ச) அவர்கள் மாற்று மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது வரலாற்றில் ஆதாரபூர்மாகப் பதியப்பட்டுள்ளது. முஹம்மது நபி கொடூர குணம் கொண்டவராக இருந்ததே இல்லை. ‘நபி(ச) அவர்கள் மென்மையான சுபாவமுடையவராக இருந்தார்கள்” என ஆயிஷா(ர) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம் 1213-137 அவர்கள் எதிலும் இலகுத் தன்மையை நேசிப்பவராகவே இருந்தார்கள். பின்வரும் நபிமொழி ...

  • 13 January

    பைபிளில் முஹம்மத். (05) |இஸ்மாயில் நபியின் சந்ததியில் இறைத்தூதர் முஹம்மத் நபி (ச) | Article.

    அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) இஸ்மவேல் ஈஸாக் (இஸ்மாயீல்-இஸ்ஹாக்) ஆகிய இரு தூதர்களும் ஆசிர்வதிக்கப்பட்டனர். இஸ்ஹாக் நபியின் சந்ததியில்தான் ஏராளமான இறைத்தூதர்கள் வந்தார்கள். இஸ்மாயில் நபியின் சந்ததியில் ஒரேயொரு இறைத்தூதர்தான் வந்தார். அவர்தான் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபியாவார்கள். முஹம்மது நபியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இஸ்மவேல் – இஸ்மாயில் நபி ஆசிர்வதிக்கப்பட்டார் என்ற பைபிளின் செய்தி பொய்ப்பிக்கப்பட்டதாகிவிடும் என்பது குறித்து ஏற்கனவே நாம் விபரித்தோம். எதிர்பார்க்கப்பட்ட அந்த நபி முஹம்மத்(ச) அவர்களே!: ‘எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: ...

  • 13 January

    இஸ்லாம் இனவாதமுமல்ல மதவாதமுமல்ல. | Article.

    ஒருவர் ஒரு மொழியைப் பேசுவது மொழிவாதமாகாது! தனது மொழி அல்லாத ஏனைய மொழிகளை எதிர்ப்பதே மொழிவாதமாகவும் மொழி வெறியாவும் இருக்கும். இவ்வாறே ஒருவர் ஓரு இனத்தைச் சேரர்ந்தவராக இருப்பதிலும் பிரச்சினை இல்லை. தனது இனத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதும் பிழையில்லை. பிற இனத்தை இழிவாகப் பேசுவதும் எதிரர்ப்பதுமே இனவாதமாகும். இவ்வாறே ஒருவர் தனது மதத்தைப் பின்பற்றுவது தவறன்று. அது அவரவர் கொள்கையைப் பொறுத்ததாகும். ஆனால், தனது மதத்தைப் பின்பற்றும் ஒருவர், அடுத்தவர்கள் தமது மதத்தைப் பின்பற்றுவதைத் தடுப்பதும், அதற்கு முட்டுக்கட்டை போடுவதுமே மதவாதமாகும். இஸ்லாம் இந்த ...

November, 2016

  • 2 November

    பைபிளில் முஹம்மத் (ஸல்) | கட்டுரை.

    பைபிளில் முஹம்மத் (ஸல்) மூஸாவைப் போன்ற தூதர்: மூஸாவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வருவார் என பைபிள் கூறுகின்றது. முன்னறிவிக்கப்பட்ட அந்தத் தூதர் இயேசுதான் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆனால், இஸ்ரவேல் சமூகத்தில் மோஸேவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வந்ததில்லை என பைபிளே கூறுகின்றது. அதே வேளை முஹம்மத் நபியை அல் குர்ஆன் மூஸா நபிக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றது. குறித்த முன்னறிவிப்புக்குப் பொருத்தமானவர் முஹம்மத் நபியா? அல்லது இயேசுவா? இருவரில் அந்த முன்னறிவிப்புக்குரியவர் யார் என்பதையே இத்தொடரில் விரிவாக ஆராயவுள்ளோம். 01. அவர்களுக்காக ஒரு ...

February, 2016

  • 19 February

    இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும்

    ஒருவர் செய்த பாவத்திற்கு மற்றவர் தண்டிக்கப்படமாட்டார் என்பதே புதிய, பழைய ஏற்பாட்டின் போதனையாகும். இந்த போதனையின் அடிப்படையில் கிறிஸ்தவ உலகு நம்பும் பிறவிப் பாவம் என்பதே தப்பானது. மனித இனத்தின் பிறவிப் பாவத்தைப் போக்க இயேசு சிலுவையில் உயிரை அர்ப்பணித்தார் என்பது அதைவிடத் தப்பானதாகும். இயேசு உயிரை அர்ப்பணித்தாரா? உலகில் பலரும் பலவற்றிற்கு உயிரை அர்ப்பணிக்கின்றனர். பிள்ளையைக் காப்பதற்காக தாய் உயிரை அர்ப்பணிக் கின்றாள். மக்களைக் காப்பதற்காக இராணுவம் உயிரை அர்ப்பணிக்கின்றது. சில தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் சிலர் தமது கொள்கைக்காகவும், தமது இன ...

  • 19 February

    மாடறுப்புத் தடைச்சட்டம் ஏற்படுத்தும் மறுவிளைவுகள்

    களுத்துறை பயாகல இந்துக் கல்லூரியின் தைப்பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் இலங்கையில் மாடறுப்பது முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். மாடறுப்பதைத் தடை செய்துவிட்டு உணவுக்காக மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடு குறித்து தான் நிதியமைச்சரிடம் ஆலோசனை கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ஆட்சியில் மாடறுப்பைத் தடுக்க வேண்டும் என பல இனத்தவர்கள் பலமான கோரிக்கையை முன்வைத்த போதும் இதற்காக பௌத்த தேரர் ஒருவர் தீக்குளித்து மரணித்த போதும் கூட அவர் இப்படியொரு வார்த்தையை வெளியிடவில்லை. ...

September, 2015

  • 22 September

    இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் – 7

    குர்ஆன், பைபிள் இரண்டுமே இயேசு பற்றிப் பேசுகின்றன. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இயேசுவை மதிக்கின்றனர். முஸ்லிம்கள் இயேசுவை இறைவனின் திருத்தூதர் என்று போற்றுகின்றனர். அவர் ஆண் தொடர்பின்றி அற்புதமாகப் பிறந்தவர், பிறந்ததும் தனது தாயின் தூய்மை பற்றி அற்புதமாகப் பேசியவர். இறைவனிடமிருந்து வேத வெளிப்பாட்டைப் பெற்று மக்களுக்கு நற்போதனை செய்தவர். இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பவர். உலக அழிவு நெருங்கும் போது மீண்டும் பூமிக்கு வந்து நீதியான, அமைதியான ஒரு ஆட்சியை உலக மக்களுக்கு வழங்குவார் என்றெல்லாம் முஸ்லிம்கள் நம்புகின்றனர். பைபிளும், குர்ஆனும் இயேசு பற்றிக் ...