Category: கட்டுரைகள்

  • ஏன் இந்த நிலை | கட்டுரை.

    ஏன் இந்த நிலை | கட்டுரை.

    பலஸ்தீன் பதறுகின்றது! காஷ்மீர் கதறுகின்றது! சிரியா சீரழிகின்றது! ஆப்கான் அழிந்துவிட்டது! ஈராக் இடி விழுந்தது போலாகிவிட்டது! இருக்கும் அனைத்து நாடுகளிலும் முஸ்லிம்களின் முகாரி ராகம் கேட்கின்றது. ஏன் இந்த நிலை? இஸ்லாமிய உம்மத்திற்கு ஈடேற்றம் இல்லையா? விடிவு இல்லையா? தொல்லைகளும் தோல்விகளும் ஏன் முஸ்லிம் உம்மத்தைத் துரத்துகின்றன? இப்படியானதொரு ஐயம் பலரது மனதிலும் இருக்கலாம். இதற்கான தெளிவை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வது அவசியமாகும். சோதனை அல்லாஹ்வின் ஒரு சுன்னத்: ஈமான் கொண்டவர்களை அல்லாஹ் சோதிப்பதென்பது அவனது…

  • ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள் | கட்டுரை.

    ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள் | கட்டுரை.

    ஜல்லிக்கட்டு என்றும் ஏறு தழுவுதல் என்றும் அழைக்கப்படும்; காளை மாட்டை அடக்கி வீரத்தை வெளிப்படுத்தும் தமிழர் பாரம்பரிய விளையாட்டை இந்திய நீதிமன்றம் தடுத்தது. தடுக்கப்பட்டது ஒரு விளையாட்டுத் தான்! இந்த விளையாட்டில் விபத்துக்களும் ஆபத்துக்களும் உள்ளன. ஆயிரம் விளையாட்டுக்கள் இருக்கும் போது ஒரு விளையாட்டைத் தடுத்தால் என்ன என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் இதைக் கணிக்கவில்லை; தமிழர் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தடுக்கும் செயலாகவே இதைக் கணித்தனர். ஜல்லிக்கட்டுக்காக காளை மாடுகளை வளர்க்கும் மரபு நீங்கி, காளை இனத்தை…

  • முஹம்மது நபியும் மாற்று மதத்தவர்களும் | Article.

    முஹம்மது நபியும் மாற்று மதத்தவர்களும் | Article.

    அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர் உண்மை உதயம்) நபி(ச) அவர்கள் இஸ்லாத்தின் போதகராவார். இஸ்லாத்தை பயங்கர வாதமாகவும் தீவிரவாதமாகவும் சித்தரிப்பவர்கள் முஹம்மது நபியைக் கொடூரமானவராகச் சித்தரிக்க முற்படுகின்றனர். நபி முஹம்மத்(ச) அவர்கள் மாற்று மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது வரலாற்றில் ஆதாரபூர்மாகப் பதியப்பட்டுள்ளது. முஹம்மது நபி கொடூர குணம் கொண்டவராக இருந்ததே இல்லை. ‘நபி(ச) அவர்கள் மென்மையான சுபாவமுடையவராக இருந்தார்கள்” என ஆயிஷா(ர) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம் 1213-137 அவர்கள் எதிலும் இலகுத்…

  • இனவாதமும் தீய சக்திகளின் சுயலாபமும். | Article.

    இனவாதமும் தீய சக்திகளின் சுயலாபமும். | Article.

    அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) இலங்கை ஓர் எழில் கொஞ்சும் நாடு! இயற்கை வளம் மிக்க தேசம்! அதில் வாழும் மக்களும் நல்லவர்கள்! வளர்முக நாடுகளில் கல்வியறிவு அதிகம் கொண்ட நாடு நமது நாடாகும். இப்படியான இந்நாட்டு மக்களிடம் இயற்கையிலேயே பல நல்ல குணாம்சங்கள் உள்ளன. ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும் போது பண்பாட்டு பழக்க வழக்கங்களில் இலங்கையர்கள் உன்னதமானவர்கள் என்று ஆணித்தரமாகக் கூறலாம். ஒரு காலத்தில் இலங்கையைப் போன்று வர வேண்டும்,…

  • பைபிளில் முஹம்மத். (05) |இஸ்மாயில் நபியின் சந்ததியில் இறைத்தூதர் முஹம்மத் நபி (ச) | Article.

    பைபிளில் முஹம்மத். (05) |இஸ்மாயில் நபியின் சந்ததியில் இறைத்தூதர் முஹம்மத் நபி (ச) | Article.

    அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) இஸ்மவேல் ஈஸாக் (இஸ்மாயீல்-இஸ்ஹாக்) ஆகிய இரு தூதர்களும் ஆசிர்வதிக்கப்பட்டனர். இஸ்ஹாக் நபியின் சந்ததியில்தான் ஏராளமான இறைத்தூதர்கள் வந்தார்கள். இஸ்மாயில் நபியின் சந்ததியில் ஒரேயொரு இறைத்தூதர்தான் வந்தார். அவர்தான் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபியாவார்கள். முஹம்மது நபியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இஸ்மவேல் – இஸ்மாயில் நபி ஆசிர்வதிக்கப்பட்டார் என்ற பைபிளின் செய்தி பொய்ப்பிக்கப்பட்டதாகிவிடும் என்பது குறித்து ஏற்கனவே நாம் விபரித்தோம். எதிர்பார்க்கப்பட்ட அந்த நபி முஹம்மத்(ச) அவர்களே!: ‘எருசலேமிலிருந்து…

  • இஸ்லாம் இனவாதமுமல்ல மதவாதமுமல்ல. | Article.

    இஸ்லாம் இனவாதமுமல்ல மதவாதமுமல்ல. | Article.

    ஒருவர் ஒரு மொழியைப் பேசுவது மொழிவாதமாகாது! தனது மொழி அல்லாத ஏனைய மொழிகளை எதிர்ப்பதே மொழிவாதமாகவும் மொழி வெறியாவும் இருக்கும். இவ்வாறே ஒருவர் ஓரு இனத்தைச் சேரர்ந்தவராக இருப்பதிலும் பிரச்சினை இல்லை. தனது இனத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதும் பிழையில்லை. பிற இனத்தை இழிவாகப் பேசுவதும் எதிரர்ப்பதுமே இனவாதமாகும். இவ்வாறே ஒருவர் தனது மதத்தைப் பின்பற்றுவது தவறன்று. அது அவரவர் கொள்கையைப் பொறுத்ததாகும். ஆனால், தனது மதத்தைப் பின்பற்றும் ஒருவர், அடுத்தவர்கள் தமது மதத்தைப் பின்பற்றுவதைத் தடுப்பதும், அதற்கு…

  • அல்குர்ஆன் விளக்கக் குறிப்புகள் – தடம் புரளும் உள்ளங்கள் | Article.

    அல்குர்ஆன் விளக்கக் குறிப்புகள் – தடம் புரளும் உள்ளங்கள் | Article.

    ‘எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புறளச் செய்து விடாதே! மேலும், உன்னிட மிருந்து அருளை எமக்கு வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய்.’ (3:8) முதஷாபிஹத்தான வசனங்களை வைத்து உள்ளத்தில் குழப்பமுள்ளவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று எச்சரிக்கை செய்த பின்னர் இந்த துஆவை அல்லாஹ் எமக்குக் கற்றுத் தருகின்றான். நேர்வழி என்பது அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது. உள்ளத்தில் நோய் உள்ளவர்களின் குதர்க்கமான வாதங்களால் எமது உள்ளங்கள் தடம் புரண்டுவிடக் கூடாது…

  • நாற்பது வயதில் புரியும்.! | கட்டுரை.

    நாற்பது வயதில் புரியும்.! | கட்டுரை.

    ‘மனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே சுமந்து, சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுத்தாள். அவனை(க் கர்ப்பத்தில்) சுமப்பதும், அவனுக்குப் பால் குடியை மறக்கடிக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடை களுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் புரிவதற்கும் எனக்கு அருள்பாலிப்பாயாக!…

  • எதிர்ப்புணர்வுகளுக்கு எண்ணெய் வார்க்கும் எம்மவர்கள் | கட்டுரை.

    எதிர்ப்புணர்வுகளுக்கு எண்ணெய் வார்க்கும் எம்மவர்கள் | கட்டுரை.

    முஸ்லிம் சமூகத்தை சீண்டிப் பார்ப்பதற்காகவும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிகளைக் கக்குவதற்காகவும் இஸ்லாமிய விரோத சக்திகள் காலத்துக்குக் காலம் சில பிரச்சினைகளைத் தூக்கிப் பிடிப்பதுண்டு! அதில் ஒன்றுதான் பொது சிவில் சட்டம் எனும் கோஷமாகும். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இனவாத, மதவாத சிந்தனைப் போக்குடைய PJP அரசு சில முன்னெடுப்புக்களை நகர்த்தி வருகின்றது. நடுநிலையான சில சிந்தனையாளர்களும் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமுகப்பட்ட போக்கையும் எடுத்துக் காட்டும் வண்ணம்…

  • அடிபணிந்தால் அதிகாரம் வரும் | கட்டுரை.

    அடிபணிந்தால் அதிகாரம் வரும் | கட்டுரை.

    அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் முறையாக அடிபணிந்தால் ஆட்சி அதிகாரம் வரும் என அல்லாஹ் அல்குர்ஆனில் வாக்களிக் கின்றான். ‘உங்களில் நம்பிக்கை கொண்டு, நல்லறங் களும் புரிந்தோருக்கு, இவர்களுக்கு முன்னுள் ளோர்களை பூமியில் அதிபதிகளாக்கியது போன்று இவர்களையும் ஆக்குவதாகவும், இவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட இவர்களது மார்க்கத்தை உறுதிப்படுத்துவதாகவும், இவர்களது அச்சத்திற்குப் பின்னர் நிச்சயமாக பாதுகாப்பை இவர்களுக்கு ஏற்படுத்துவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கின்றான். இவர்கள் எனக்கு எதனையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள். இதன் பின்னரும் யார் நிராகரிக்கிறார்களோ அவர்கள்தாம் பாவிகள்.’…