ஆய்வுகள்

October, 2018

  • 1 October

    இளமையும் இஸ்லாமும் | Article.

    இளமையும் இஸ்லாமும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினமாகும். இளமையை வீணாக விரயமாக்கிக் கொண்டிருக்கும் இளைய சமூகத்தை விழிப்படையச் செய்து அவர்களை வினைத்திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இளமையும் இஸ்லாமும்: மனிதனின் வாழ்க்கைக் காலத்தையும் அவனது இளமைக் காலத்தையும் அல் குர்ஆன் இப்படிச் சித்தரித்துக் காட்டுகின்றது. ‘அவன்தான் மண்ணிலிருந்தும் பின்னர்; இந்திரியத் துளியிலிருந்தும் பின்னர் (கருவறைச் சுவரில்) ஒட்டிக் கொள்ளக் கூடியதிலிருந்தும் உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை சிசுவாக வெளியேற்றுகின்றான். பின்னர் உங்கள் இளமையை நீங்கள் ...

May, 2018

  • 18 May

    முஸ்லிம்களும் தேசிய ஒருமைப்பாடும்.

    இந்நாட்டில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இலங்கையின் இறைமைக்கு சவால் விடாத ஒரே சமூகமாக முஸ்லிம் சமூகம்தான் உள்ளது. தமிழ் சமூகமும் ஆயுதப் போராட்டமும்: தமிழ் சமூகத்திற்கு எதிராக எழுந்த இனவாத மொழிவெறி கொண்ட செயற்பாடுகளால் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர். அது பின்னர் பயங்கரவாதமாக உருவெடுத்தது. இதனால் ஏற்பட்ட போரில் நாட்டின் வளங்களும் அபிவிருத்தியும் நற்பெயரும் பெறுமதிமிக்க உயிர்களும் பறிபோயின. போர் மற்றும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளால் மிகப் பெரிய உயிர் உடைமை இழப்பை முஸ்லிம் சமூகம் சந்தித்தது. தமிழ் ...

April, 2018

  • 9 April

    ஜமாஅத் அணியில் எப்படி நிற்க வேண்டும். | ஜமாஅத்துத் தொழுகை | பிக்ஹுல் இஸ்லாம் – 36.

    ஜமாஅத்தாகத் தொழும் போது இமாம் மற்றும் மஃமூம்கள் எந்த இடத்தில் எத்தகைய ஒழுங்கில் நிற்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். இமாமுடன் ஒருவர் மட்டும் தொழுதால்: இருவர் ஜமாஅத்தாகத் தொழுகின்றனர். ஒருவர் இமாம் மற்றவர் மஃமூம். இந்த சந்தர்ப்பத்தில் பின்பற்றித் தொழுபவர் இமாமுக்குப் பின்னால் வரிசையில் நிற்பது போன்று தொழுகின்றனர். மற்றும் சிலர் இமாமுக்கு வலது பக்கத்தில் சற்று பின்னால் நின்று தொழுகின்றனர். மற்றும் சிலர் வரிசையில் நிற்பது போல் இமாமின் வலது பக்கத்தில் இமாமுக்கு நேராக நின்று தொழுகின்றனர். இதில் மூன்றாவது ...

  • 7 April

    ஈஸா நபி மரணித்துவிட்டார்களா? | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 17

    ‘முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவர் மரணித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் வந்தவழியில் புறமுதுகிட்டுச் சென்று விடுவீர்களா? எவன், தான் வந்த வழியே புறமுதுகிட்டுச் சென்று விடுகின்றானோ, அவன் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் விரைவில் கூலி வழங்குவான். ‘ (3:144) உஹதுப் போரின் போது முஹம்மது நபி கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்ட போது நபித்தோழர்களில் சிலர் நிலை தடுமாற்றம் அடைந் தார்கள். இதைக் குறித்தே இந்த வசனம் ...

  • 4 April

    சிரியா – ஒரு போராட்ட பூமி.

    சிரியாவில் பஷ்ஷாரின் ஷியா படையும், ரஷ்யாவின் நாஸ்தீகப் படையும், அமெரிக்காவின் கூலிப் படைகளும் நிகழ்த்தி வரும் கொடூர போர்க்களத்தில் அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். போர்க் களத்தில் சிறுவர்களையும், பெண்களையும் கொலை செய்வதைத் தடை செய்துள்ளது இஸ்லாம். ஆனால், இந்தப் போரில் கொத்துக் கொத்தாக குண்டு மழை பொழியப்பட்டு சிறுவர்கள் அப்பாவிகள் கொன்று குவிக்கப்படுகின்றனர். உலக ஊடகங்கள் இந்தக் கொடிய போரை முஸ்லிம்கள், ஷியா – சுன்னா பிரிவுகளாகப் பிரிந்து மோதிக் கொள்வதாக சித்தரிக்கின்றன. ஆனால் உண்மை அது மட்டுமல்ல. பஹ்ரைன், குவைத், சவூதி ...

  • 4 April

    நபிக்கு அதிகாரத்தில் பங்கில்லை | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 16.

    ‘(நபியே!) அதிகாரத்தில் உமக்கு யாதொரு பங்கும் இல்லை. (அல்லாஹ்) அவர்களுக்கு மன்னிப்பு வழங்கலாம் அல்லது நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்கள் என்பதால் அவன் அவர்களைத் தண்டிக்கலாம்.’ (3:128) உஹதுப் போரில் நபி(ச) அவர்களின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர்களது முகத்தில் இரத்தம் கசிந்தது. அப்போது, ‘தங்கள் நபியைக் காயப்படுத்திய ஒரு சமூகம் எப்படி வெற்றி பெறும் என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள். அப்போதுதான் மேற்படி வசனமும் அருளப்பட்டது.’ (முஸ்லிம்: 1791-104) இந்த வசனத்தின் மூலம் இஸ்லாத்தின் ஏகத்துவத்தின் உண்மை நிலை உணர்த்தப் படுகின்றது. அதிகாரத்தில் ...

  • 3 April

    ஜமாஅத்துத் தொழுகை – இமாமத்தும் அதன் சட்டங்களும் | பிக்ஹுல் இஸ்லாம் – 35

    ஜமாஅத் தொழுவதாக இருந்தால் ஒருவர் இமாமாக தொழுகையை நடத்த வேண்டும். இமாமின் தகுதி என்ன? யார் இமாமத் செய்ய வேண்டும் என்ற விபரம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய தொன்றாகும். காரீஆ? பகீஹா? இமாமத் செய்பவர் அல்குர்ஆனை அழகிய முறையில் ஓதக் கூடியவராக இருக்க வேண்டும் என இமாம்களான அபூ ஹனீபா மற்றும் தவ்ரீ அஹ்மத் ஆகியோர் கருதுகின்றனர். அழகிய தொனியில் ஓதுவதை விட சட்டதிட்டங்கள் பற்றிய அறிவு அதிகம் உள்ள பகீஹ்தான் தொழுகை நடத்த அதிகம் தகுதியானவர் என ஷாபிஈ மற்றும் மாலிக் மத்ஹபினர் ...

  • 3 April

    சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம்

    அல்லாஹுதஆலா சில நாட்களை சிறப்பித்துள்ளான். அவ்வாறே சில மாதங்களையும் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வினால் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கில் ரஜப் மாதமும் ஒன்றாகும். ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ் வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமான வையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக ...

  • 3 April

    இஸ்ராவும் மிஃராஜும்

    நபி(ச) அவர்களது வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதங்களில் இஸ்ராவும் மிஃராஜும் அடங்கும். இது தொடர்பான சில விளக்கங்களை இக்கட்டுரையூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இஸ்ரா: ‘அஸ்ரா’ என்றால் இரவுப் பயணம் செய்தல் என்பது அர்த்தமாகும். நபி(ச) அவர்கள் ஒரு நாள் இரவு மஸ்ஜிதுல் ஹரமில் இருந்து பலஸ்தீனத்தில் பைத்துல் முகத்திஸ் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதுவே இஸ்ரா என்று கூறப்படுகின்றது. ‘(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் ...

February, 2018

  • 26 February

    அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 15 | மலக்குகளின் எண்ணிக்கை எத்தனை? ஏன்?

    ‘நீங்கள் பலம் குன்றியிருந்த நிலையிலும் பத்(ர்ப் போ)ரில் அல்லாஹ் உங்களுக்கு நிச்சயமாக உதவி செய்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.’ ‘மூவாயிரம் வானவர்களை உங்கள் இரட்சகன் இறக்கி உங்களுக்கு உதவி புரிந்தது உங்களுக்குப் போதாதா?’ என்று நம்பிக்கை கொண்டோரிடம் (நபியே!) நீர் கூறியதை (எண்ணிப் பார்ப்பீராக!) ஆம்! நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் போது அ(ப்பகை)வர்கள் உங்கள் மீது திடீரென(த் தாக்க) வந்தால் (போருக்கான) அடையாளங்களுடன் கூடிய ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இரட்சகன் உங்களுக்கு ...