அரசியல்

November, 2018

  • 5 November

    விழி இழந்த பின் விளக்கெதற்கு | கட்டுரை.

    ஆசிரியர் பக்கம் : (செப்டம்பர் 2018) விழி இழந்த பின் விளக்கெதற்கு இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இனவாத அமைப்புக்கள்| முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுக்கு இல்லாத சலுகைகளைப் பெற்று வருவதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டு வந்தன. முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காழி நீதிமன்ற அமைப்புக்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும் முன்வைத்து வந்தன. சதிகளும் சவால்களும் நிறைந்த இந்த சூழலில்தான் நாம் சர்ச்சைப்பட்டு வருகின்றோம். ...

  • 3 November

    நல்ல தலைமையும் நாட்டு நிலைமையும்┇Video

     ஜும்ஆ உரை: அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி ”நல்ல தலைமையும் நாட்டு நிலைமையும்” ”NALLA TALAIMAIUM NAATTU NILAIMAIUM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFI JUMMA@JTJM PARAGAHADENIYA 02/11/2018

  • 2 November

    ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை

    அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர் – உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ்) ஜமால் கஷோக்ஜியின் படுகொலை விவகாரம் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம்கள் மத்தியிலும் கடந்த சில வாரங்களாக சலசலப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. துருக்கியில் உள்ள சவூதி துணைத் தூதரகத்துக்குள் அவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பரவலாக அறியப்பட்ட விடயமாகும். இது தொடர்பில் சில கருத்துக்களை இந்த இடத்தில் பதிவிடலாம் என எண்ணுகின்றேன். ஜமால் கஷோக்ஜியின் படுகொலைக்காக அமெரிக்காவும் அழுகின்றது. ஐ.நா.வும் பதறுகின்றது. உண்மையில் கொலைக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் தார்மீக உரிமை ...

September, 2018

  • 11 September

    முஸ்லிம் தனியார் சட்டம்.

    அஷ்ஷெய்க்:S.H.M இஸ்மாயில் ஸலபி முஸ்லிம் தனியார் சட்டம். ”MUSLIM TANIYAR SATTAM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFI @JTJM PARAGAHADENIYA 05/09/2018. 

  • 11 September

    தாங்கிப் பிடிக்க ஆள் இருந்தால் தூங்கித் தூங்கி விழுமாம் பிள்ளை.

    இலங்கை ஒரு சின்னத் தீவாகும். இந்த அழகிய சின்னஞ் சிறு தீவை பயங்கரவாதமும், இனவாதமும் அழித்து வந்தது போதாது என்று இன்று அதனுடன் போதை வஸ்தும் கைகோர்த்துள்ளது. இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, சுற்றுலாத் துறையின் வளர்ச்சி என்பவற்றுடன் இலங்கை சர்வதேச போதைக் கடத்தல் மாபியாக்களின் மத்திய தளமாக மாறி வருகின்றதோ என்று ஐயப்படும் நிலை உருவாகியுள்ளது. 1981 மே 26 இல் 70 கிராம் ஹெரோயின் இலங்கையில் கைப்பற்றப்பட்டது. இன்று நூற்றுக் கணக்கான கிலோ போதை வஸ்த்துக்கள் கைப்பற்றப்படும் நிலைக்குச் சென்றுள்ளது. யுத்தத்திற்குப் ...

July, 2018

  • 28 July

    சமய பிரச்சினைகளும் சமூகப் பிரச்சினைகளும். | Video | Jumua | Thihari.

    முஸ்லிம் சமூகம் கவனம் செலுத்த வேண்டிய சமய பிரச்சினைகளும் சமூகப் பிரச்சினைகளும் 27.07.2018. Jamiu Abeebucker As Siddeek Jumma Masjid Central Place Warana Road Thihari. 

  • 2 July

    முஸ்லிம் பெண்களின் ஆடை அடிப்படை வாதத்தின் அடையாளமா?

    முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, பர்தா போன்ற ஆடை அமைப்பு அடிப்படைவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த ஆடை முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. இப்போது ஏன் இப்படி அணிகின்றனர் என்று கேட்கின்றனர். ஒருவர் அணியும் ஆடையை வைத்து அடிப்படை வாதத்தைத் தீர்மானிக்க முடியுமா? முப்பது வருடங்களுக்கு முன் நாம் இப்படி ஆடை அணியாவிட்டால் இப்போது அணியக் கூடாதா? இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ் பெண்கள் இப்போது அணியும் ஆடையைத்தான் முப்பது வருடங்களுக்கு முன்னரும் அணிந்தார்களா? குறிப்பிட்ட சில காலங்களுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட ...

  • 1 July

    குருநாகலையை குறுகிய காலம் ஆண்ட முஸ்லிம் மன்னன் | Article.

    வத்ஹிமி அல்லது கலே பண்டார என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் மன்னன் குருநாகலை இராசதானியை குறுகிய காலம் ஆண்டுள்ளார். இவரது இயற் பெயர் ‘குரஷான் செய்யது இஸ்மாயில்’ என்பதாகும். இவர் இரண்டாம் புவனேகபாகுவின் புதல்வராவார். அவரது முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த இஸ்மாயில்| தந்தை இரண்டாம் புவனேகபாகுவின் மரணத்தைத் தொடர்ந்து மன்னரா னார். இது குறித்த செய்திகளையும் வரலாற்றுத் தகவல்களையும் சற்று விரிவாக நோக்குவோம். குருநாகலையும் முஸ்லிம் குடியேற்றமும்: இலங்கை முஸ்லிம்கள் கடற்கரைப் பிரதேசங்கள் மட்டுமன்றி நாட்டின் மத்திய பகுதியிலும் பரவலாகக் குடியேறியுள்ளனர். குறிப்பாக குருநாகலையில் ...

June, 2018

  • 16 June

    JASMன் பிறைத் தீர்மானத்திற்கான காரணமும் ACJUன் நிலையும். | Jumua.

    ஜும்ஆ உரை: அஷ்ஷெயிக்: S.H.M இஸ்மாயில் ஸலபி ”JASM IN PIRAI TEERMANATTHITKANA KARANAMUM ACJU IN NILAIUM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFI JUMMA@JTJM PARAGAHADENIYA 15/06/2018” JASMன் பிறைத் தீர்மானத்திற்கான காரணமும் ACJUன் நிலையும். | Jumua. 

  • 4 June

    இஸ்லாமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் | World Environment Day (June 05)

    ஜூன் மாதம் 05 ஆம் திகதி World Environment Day – சர்வதேச சுற்றுச் சூழல் பாதுகாப்பு- தினமாகும். மனித வாழ்வு இயந்திரமயமான பின்னர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது தினம் தினம் கேள்விக் குறியாகிக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயந்திரங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றினூடாக எமது சுற்றுப் புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. நாம் வாழும் எமது பூமியின் இயற்கைத் தன்மையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு பக்குவமாக வழங்குவது எமது தார்மீகப் பொறுப்பாகும். ​இன்றைய அரசுகள் சுற்றுப் ...