Author: admin

  • ஜும்ஆவின் முன் சுன்னத்து | பிக்ஹுல் இஸ்லாம் (39)

    ஜும்ஆவின் முன் சுன்னத்து | பிக்ஹுல் இஸ்லாம் (39)

    ஜும்ஆத் தொழுகை ஜும்ஆவுக்கு இரண்டு அதான் கூறுவது தொடர்பில் சென்ற இதழில் ஆராய்ந்தோம். ஜும்ஆவின் முன் சுன்னத்து: முதல் அதான் கூறப்பட்ட பின்னர் முஅத்தின் ஜும்ஆவின் முன் சுன்னத்தை தொழுமாறு கூறுவார். அதன் பின் எல்லோரும் எழுந்து ஜும்ஆவின் முன் சுன்னத்துத் தொழுவர். இந்தப் பழக்கம் இலங்கையில் மட்டுமல்லாது மற்றும் பல நாடுகளிலும் உள்ளது. சென்ற இதழில் நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர்(ர) இருவர் காலத்திலும் உஸ்மான்(ர) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் ஜும்ஆவுக்கு ஒரு…

  • குழந்தையின் நடத்தை பிறழ்வுகள்;  காரணங்களும் தீர்வுகளும்.- 03

    குழந்தையின் நடத்தை பிறழ்வுகள்; காரணங்களும் தீர்வுகளும்.- 03

    கனவன் மனைவி இருவரும் தத்தமது கடமைகளை நிறைவேற்றி அடுத்தவர் உரிமையை மதித்து நடந்தால் அமைதியான குடும்பம் அமையும் நல்ல சந்ததிகள் உருவாகுவார்கள். இதன் பின்பும் கணவனின் மோசமான பண்புகளாலோ, மனைவியின் மோசமான பண்புகளாலோ இருவருக்குமிடையிலான உடன் பாட்டிற்கு சிரமம் ஏற்பட்டாலே அவர்களுக்கிடையிலான வாழ்க்கையை நிலைபெற செய்ய முடியாவிட்டாலோ கணவன் தலாக் எனும் முடிவை எடுக்கும் முன் கீழ்வரும் படித்தரங்களைப் பூரணமாக நிறைவேற்றுவது கடமையாகும். நல்லுபதேசம் செய்தல்: நல்லுபதேசம் ஈமானுடையோருக்கு பயனளிக்கும் என்ற வகையில் இது அமையும். படுக்கையில்…

  • ஷிர்க்கும் சிலந்தி வீடும் | Article

    ஷிர்க்கும் சிலந்தி வீடும் | Article

    அல் குர்ஆன் அடிப்படையான சில விடயங்களைக் கூட உதாரணங்கள் கூறி விளங்க வைக்கும். அவ்வாறு அது கூறும் உதாரணங்களை ஆழமாக நோக்கினால் அல்லாஹ்வின் இறைமையையும் அல்குர்ஆன் இறைவேதம் என்பதையும் உறுதி செய்வதாக அமைந்திருக்கும். இந்த வகையில் இணைவைத்தலுக்கு அல்லாஹ் உதாரணம் கூறும் போது சிலந்தி வீட்டை உதாரணமாகவும் உவமையாவும் கூறுகின்றான். ‘அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோரின் உதாரணம், சிலந்தியின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிகப் பலவீனமானது சிலந்தியின்…

  • விபச்சாரக் குற்றமும் நான்கு சாட்சியமும்.

    விபச்சாரக் குற்றமும் நான்கு சாட்சியமும்.

    அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் : விபச்சாரக் குற்றமும் நான்கு சாட்சியமும். “உங்கள் பெண்களில் எவரேனும் மானக் கேடான செயலைச் செய்துவிட்டால் அவர்களின் மீது (அதை நிரூபிக்க) உங்களில் நான்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை, அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.” (4:15) இந்த வசனத்தின் முதல் பகுதி விபச்சாரக் குற்றத்தை நிரூபிப்பதற்கு நான்கு சாட்சிகள் தேவை என்கின்றது. அந்நான்கு சாட்சிகளும்…

  • அஹ்லுல் பித்ஆ | அடிப்படை அடையாளம். | Article.

    அஹ்லுல் பித்ஆ | அடிப்படை அடையாளம். | Article.

    நபி(ச) அவர்களது மரணத்திற்குப் பின்னர் இஸ்லாத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட சிந்தனைகள், செயல்கள், வார்த்தைகள் அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும். இந்த பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளாகும். தனக்குப் பின்னர் இந்த உம்மத்தில் பித்அத்துக்கள் தோன்றும் என்றும் அப்போது நபி(ச) அவர்களது சுன்னாவையும் நேர்வழி நடந்த கலீபாக்களின் வழிமுறைகளையும் இறுகப் பற்றிப் பிடிக்கும் படியும் நபி(ச) அவர்கள் எமக்கு வஸிய்யத் செய்துள்ளார்கள். ஒரு பித்அத்தான செயல் உருவாக்கப்பட்டால் அந்த பித்அத்தைச் செய்யும் பித்அத்வாதி சுன்னாவும் மார்க்கமும் விதித்த கடமைகளுக்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை…

  • பீ.ஜே யின் கருத்துக்களை மீளாய்வு செய்யுங்கள் | தொடர் 01 | கட்டுரை.

    பீ.ஜே யின் கருத்துக்களை மீளாய்வு செய்யுங்கள் | தொடர் 01 | கட்டுரை.

    இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். பீ.ஜே. என சுருக்கமாக அழைக்கப்படுபவர். நல்ல நாவன்மையும் வாதத் திறமையும், எழுத்தாற்றலும் மிக்க இவர் தனது திறமைகளை இஸ்லாமிய அகீதாவுக்கு முற்றிலும் முரணாகப் பயன்படுத்தி வருகின்றார். இவரது போதனைகளும் அதை அவர் முன்வைக்கும் விதமும் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் மாற்று மதத்தவர்களுக்கு மத்தியிலும் குழப்பத்தையும் மன முரண்பாடுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களுடன் இணங்கிப் போகாத இவரது இயல்பு இவரது இயக்கத்தவர்களிடமும் குடிகொண்டுள்ளது. இதனால் இவரது இயக்க செயற்பாடுகளால் முஸ்லிம்களுக்கு மத்தியில்…

  • முஸ்லிங்களின் கல்வி வளர்ச்சியும் பாடசாலைகளின் முன்னேற்றமும்.

    முஸ்லிங்களின் கல்வி வளர்ச்சியும் பாடசாலைகளின் முன்னேற்றமும்.

    உரை: அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி”முஸ்லிங்களின் கல்வி வளர்ச்சியும் பாடசாலைகளின் முன்னேற்றமும்””MUSLIMGALIN KALVI VALARCHIUM PADASALAIGALIN MUNNETRAMUM”BY ASHSHK S.H.M ISMAIL SALAFI@JTJM PARAGAHADENIYA 02/12/2018

  • குழந்தையின் நடத்தை பிறழ்வுகள்; காரணங்களும் தீர்வுகளும்.- 02

    குழந்தையின் நடத்தை பிறழ்வுகள்; காரணங்களும் தீர்வுகளும்.- 02

    இஸ்லாமானது கனவர் மனைவி கடமைகளையும் உரிமைளையும் போதிய வழிகளையும் முள்வைத்துள்ளது. அவற்றில் சில, மனைவி நல்ல விடயங்களில் கவனுக்காகக் கட்டுப்படல்: “நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை பெண்கள் ஒன்று சேர்ந்து அவர்களில் ஒருவரை நபியவர்களிடம் அனுப்பி வைத்தனர். அப்பெண் நபியவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் பெண்களின் சார்பாக உங்களிடம் வந்துள்ளேன். ஜிஹாதானது ஆண்கள் மீது அலலாஹ் கடமையாக்கியுள்ளான். அவர்கள் அதில் காயப்பட்டால் கூலி கொடுக்கப்படுவார்கள் அதில் அவர்கள் கொல்லப்பட்டால் (ஷஹிதாக்கப்பட்டால்) அல்லாஹற்விடம் உயிரோடிருப்பர் உணவும் அளிக்கப்படுவார்கள்.…

  • இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும்.

    இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும்.

    ஆசிரியர் பக்கம் – டிசம்பர் 2018 (உண்மை உதயம்) இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும் இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. இக்கட்டுரை வெளிவரும் போது இந்தப் பிரச்சினை ஒரு தீர்வுக்கு வந்திருக்கலாம் அல்லது இன்னொரு கட்டத்திற்கு மாறியிருக்கலாம். ஆனால், சில உண்மைகளை இவ்வாக்கத்தின் மூலம் உணர்த்த நாடுகின்றோம். பிரதமர் நீக்கமும் நியமனமும்: ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை…

  • த மெசேஜ்  ஓர் விமர்சன நோக்கு! | Anan Asmath Bin Ismail.

    த மெசேஜ் ஓர் விமர்சன நோக்கு! | Anan Asmath Bin Ismail.

    த மெசேஜ் ஓர் விமர்சன நோக்கு! ஆக்கம்: Anan Asmath Bin Ismail. (மகன்) நபி(ச) அவர்களின் தூதுத்துவ வரலாறு 1976 ஆம் ஆண்டு ஒரு திரைப்படமாக ‘The Message’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இதை சிரியா நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ‘முஸ்தபா அக்காப்’ என்பவர் இயக்கியிருந்தார். இப்பட உருவாக்கத்திற்கு எகிப்து, மொரோக்கோ போன்ற நாடுகள் அனுமதியும், குவைட், லிபியா ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியாக உதவுவதாகவும் வாக்களித்திருந்தன. இருந்தாலும் மக்காவிலுள்ள ‘ராபிதது ஆலமுல்…