Author: admin

  • சரிந்து வரும் சமூக மரியாதை

    ஒரு சமூகம் குறித்து பிற சமூக மக்களிடம் உயர்வான எண்ணங்கள் இருக்க வேண்டும். இது ஒரு நல்ல சமூகம் என்ற மதிப்பும் மரியாதையும் இருந்தால் அந்த சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் மரியாதையுடன் நோக்கப்படுவான். இல்லாத போது கீழ்த்தரமான, தப்பான பார்வையைத் தவிர்க்க முடியாது. இந்த அடிப்படையில் சமுதாய மரியாதையைச் சிதைப்பது நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதாகவும் அழித்துக் கொள்வதாகவும் அமையலாம். கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் குறித்து உயர்வான எண்ணம் இந்த நாட்டில் நிலவி வந்தது.…

  • சூனியம் – கேள்வி-பதில்- இந்தியா

    சூனியம் – வழிகேடர்களை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கவேண்டும்? சூனிய ஹதீஸை பதிவு செய்துள்ள இமாம் புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகியோர் சூனிய ஹதீஸை விளங்காதினாலும் எங்கள் (ததஜ) ஆய்வு வருதற்க்கு முன்னால் வாழ்ந்தவர்கள் என்பதால் அவர்களை முஷ்ரீக் என்று சொல்வதில்லை. நபி (ஸல்) அவர்கள் ஒரு காலம் வரும் அப்போது இப்போது இருப்பவர்களை விட அதிமான விளக்கம் பெறகூடியவர்கள் வருவார்கள் என்ற ஹதீஸின் அடிப்படையில் எங்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ளலாமல் சூனியம் இருக்கின்றது என்று நம்பும்…

  • பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை!

    ஹதீஸ்களை மறுக்கும் விஷயத்தில் பீஜே அன்றும் இன்றும்! காதியாணிகளின் கல்லறை பயணம் என்ற விவாதத்தில் அன்றைய காதியாணிகளின் வாதமும் இன்றைய பீஜேயின் வாதமும்?! பீஜே-யின் ஹதீஸ்களை நிராகரிக்கும் விடயத்தின் பரிணமான வளர்ச்சி? (எந்த வகையிலும் சரிகாண முடியாத ஹதீஸ்களை நிறுத்திவைத்தல், நிதர்சன உண்மைக்கு மாற்றமான ஹதீஸ்கள், எதரார்த்தமாக நிரூபிக்க முடியாத ஹதீஸ்கள், தன் மனம் ஏற்றுக்கொள்ளதாக ஹதீஸ்களை நிராகரித்தில் – இதற்கான விளக்கம்) இரண்டு வஹிக்கு மத்தியில் முரண்பாடு வருமா? அப்படி வருவதாக சொன்னால் என்ன செய்வது?…

  • அழைப்பாளர்களுக்கு – குத்பா

    ஒருவர் உரை நிகழ்த்தும் முன்னர் அல்லது குத்பாவுக்காக மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் சில தனிப்பட்ட நபர்கள் வந்து இன்றைய குத்பாவில் இதைப் பற்றிச் சொல்லுங்கள், அதைப் பற்றிச் சொல்லுங்கள் எனக் காதைக் கடிப்பார்கள். சில வேளை அது அவரது தனிப்பட்ட கோப தாபத்தைத் தீர்ப்பதற்காக விடப்படும் கோரிக்கையாகவும் இருக்கலாம். எனவே, ஒரு கதீப் நிதானமான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். அடுத்தவர்கள் உசுப்பேற்றுவதற்காக வெல்லாம் உச்சிக் கொப்பில் ஏறி நின்று குதிக்கக் கூடாது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நிர்வாகிகள் தரும்…

  • நபித்தோழர்கள் நம்பிக்கை கொண்டது போல் நம்பிக்கை கொள்வதே சிறந்த முறையாகும்

    அல்குர்ஆன் விளக்கவுரை: “அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும், இப்றாஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும் (இவரது) சந்ததிகளுக்கும் இறக்கப்பட்டவற்றையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் (மற்றும் ஏனைய) நபிமார்களுக்கும் அவர்களது இரட்சகனிடமிருந்து வழங்கப்பட்டவற்றையும் நம்பிக்கை கொண்டோம். அவர்களில் எவருக்கிடையிலும் நாம் வேற்றுமை பாராட்ட மாட்டோம், நாங்கள் அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்கள் என்று நீங்களும் கூறுங்கள்.” (2:136) இதே கருத்து பின்வரும் வசனங்களிலும் கூறப்படுகின்றன. “இத்தூதர் தனது இரட்சகனிடமிருந்து தனக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளார். முஃமின்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும்,…

  • அல்லாஹ் தீட்டும் வர்ணம்

    அல்குர்ஆன் விளக்கவுரை: “அல்லாஹ்வின் வர்ணத்தைப் (பின்பற்றுங்கள்.) அல்லாஹ்வை விட வர்ணம் தீட்டுவதில் மிக அழகானவன் யார்? நாம் அவனையே வணங்குவோராக இருக்கின்றோம் (எனக் கூறுவீர்களாக!)” (2:138) அன்றைய கிறிஸ்தவர்களுக்குக் குழந்தை பிறந்தால் 7-ஆம் நாளில் அக்குழந்தையை மஞ்சள் கலந்த நீரில் குளிப்பாட்டுவார்கள். அதனை கத்னாவுக்குப் பகரமான செயற்பாடாகவும் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு குளிப்பாட்டுவதன் மூலம் அந்தக் குழந்தை கிறிஸ்தவனாக மாறுவதாகவும் அவர்கள் கருதினர். இவ்வாறு ஒருவனை இஸ்லாத்துக்கு எடுப்பதற்கு எவ்விதமான சடங்குகளும் இல்லாது இருப்பதைக் குறையாகக்…