ஹதீஸ்

November, 2014

  • 29 November

    புஹாரி ஹதீஸ் விவசாயம் செய்வதைத் தடுக்கிறதா?

    ஆதாரபூர்வமான பல ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகின்றது. அவற்றை மறுக்க வேண்டும் என்று புதிய கொள்கையைப் புகுத்தியவர்கள் தமது வாதத்திற்கு வலு சேர்க்க சில ஹதீஸ்களுக்கு வலிந்து தவறான விளக்கங்களைக் கொடுத்து வருகின்றனர். அந்த ஹதீஸ்களில் பின்வரும் நபிமொழியும் ஒன்றாகும். حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ الحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ الأَلْهَانِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ البَاهِلِيِّ، قَالَ: وَرَأَى سِكَّةً وَشَيْئًا مِنْ آلَةِ الحَرْثِ، فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ ...

  • 2 November

    பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை!

    ஹதீஸ்களை மறுக்கும் விஷயத்தில் பீஜே அன்றும் இன்றும்! காதியாணிகளின் கல்லறை பயணம் என்ற விவாதத்தில் அன்றைய காதியாணிகளின் வாதமும் இன்றைய பீஜேயின் வாதமும்?! பீஜே-யின் ஹதீஸ்களை நிராகரிக்கும் விடயத்தின் பரிணமான வளர்ச்சி? (எந்த வகையிலும் சரிகாண முடியாத ஹதீஸ்களை நிறுத்திவைத்தல், நிதர்சன உண்மைக்கு மாற்றமான ஹதீஸ்கள், எதரார்த்தமாக நிரூபிக்க முடியாத ஹதீஸ்கள், தன் மனம் ஏற்றுக்கொள்ளதாக ஹதீஸ்களை நிராகரித்தில் – இதற்கான விளக்கம்) இரண்டு வஹிக்கு மத்தியில் முரண்பாடு வருமா? அப்படி வருவதாக சொன்னால் என்ன செய்வது? பீஜே-யின் கூற்று சரியா? ஒரு இமாம் ...

  • 2 November

    ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா?

    ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிதாபுகளில் ஏராளமான ஹதீஸ்கள் சிலரால் மறுக்கப்பட்டு வருகிறது. ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறதா அல்லது மனிதனின் அறிவு குர்ஆனுக்கு முரண்படுகிறதா என்பது குறித்த ஓர் பார்வையே இந்த சொற்பொழிவு.

October, 2014

  • 31 October

    சுன்னாவும் வஹியே!

    வஹி என்றால் அல்லாஹ்விடமிருந்து அவனது தூதர்களுக்கு அருளப்பட்ட வேத வெளிப்பாட்டைக் குறிக்கும். நபி(ச) அவர்ளுக்கு அருளப்பட்ட வஹி (வேத வெளிப்பாடு) இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 01. வஹி அல் மத்லூ (ஓதப்படும் வஹி) இது குர்ஆனைக் குறிக்கும். குர்ஆனின் கருத்தும், வார்த்தைகளும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையாகும். எனவே அது “கலாமுல்லாஹ்” அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதைப் போன்ற ஒரு அத்தியாயத்தைக் கூட இந்த முழு உலகும் ஒன்று திரண்டாலும் உருவாக்க முடியாது. அந்த வார்த்தைகளே தனியான அற்பதமாகும். 02. வஹி கைர மத்லூ (ஓதப்படாத வஹி) இது ...

  • 27 October

    நபி(ஸல்) அவர்கள் சிரித்த சந்தர்ப்பங்கள் (1)

    “சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த முகத்துடன் பார்ப்பதும் தர்மமாகும் எனக் கூறிய மார்க்கம் இஸ்லாமாகும். இதே வேளை, சிரிப்புத்தான் வாழ்க்கை எனும் அளவுக்கு ஒருவனது ...

  • 25 October

    போலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்

    குர்ஆன், ஹதீஸ் என்ற அடிப்படையான இரண்டு மூலாதாரங்களின் மீதுதான் இஸ்லாம் எனும் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. குர்ஆனைப் பொறுத்தவரையில் அது அல்லாஹ்வின் ‘கலாம்’ பேச்சு என்பதால் அதில் யாரும் எந்தக் குளறுபடிகளும் செய்துவிட முடியாது. 1400 வருடங்களாக எத்தகைய இடைச்செருகல் களுக்கோ, கூட்டல் குறைத்தல்களுக்கோ உள்ளாகாமல் அட்சரம் பிசகாமல் அப்படியே அது பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவது மூலாதாரமான ஹதீஸைப் பொறுத்தவரை அதன் கருத்து வஹி மூலம் பெறப்பட்டதாயினும் வாசக அமைப்பு நபிகளாருடையதாகும். நபி(ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின்னர் ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின் சில பலவீனங்களினால் ஹதீஸின் ...

  • 25 October

    ஹதீஸ் விளக்கம் – கொலைக் குற்றத்திற்கும் மன்னிப்புண்டு

    (அபூ ஸயீத் என்ற) ஸஅது இப்னு மாலிக் இப்னு ஸினான் அல்குத்ரீ(ரலி) அறிவிக்கின்றார்கள், உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவன் இருந்தான். அவன் 99 கொலை செய்திருந்தான். (தவறை உணர்ந்த அவன்) இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு (மார்க்க அறிவு குறைந்த வணக்க-வழிபாட்டில் ஆர்வம் மிகுந்த) ராஹிப் இருக்கிறார் என்று அவனிடம் கூறப்பட்டது. அவன் அவரிடம் வந்து, தான் 99 கொலை செய்ததாகவும், தனக்கு மன்னிப்பு உண்டா? என்றும் கேட்டான். “இல்லை!” என்று அந்த ராஹிப் பதில் ...