குடும்பவியல்

December, 2018

  • 25 December

    குழந்தையின் நடத்தை பிறழ்வுகள்; காரணங்களும் தீர்வுகளும்.- 03

    கனவன் மனைவி இருவரும் தத்தமது கடமைகளை நிறைவேற்றி அடுத்தவர் உரிமையை மதித்து நடந்தால் அமைதியான குடும்பம் அமையும் நல்ல சந்ததிகள் உருவாகுவார்கள். இதன் பின்பும் கணவனின் மோசமான பண்புகளாலோ, மனைவியின் மோசமான பண்புகளாலோ இருவருக்குமிடையிலான உடன் பாட்டிற்கு சிரமம் ஏற்பட்டாலே அவர்களுக்கிடையிலான வாழ்க்கையை நிலைபெற செய்ய முடியாவிட்டாலோ கணவன் தலாக் எனும் முடிவை எடுக்கும் முன் கீழ்வரும் படித்தரங்களைப் பூரணமாக நிறைவேற்றுவது கடமையாகும். நல்லுபதேசம் செய்தல்: நல்லுபதேசம் ஈமானுடையோருக்கு பயனளிக்கும் என்ற வகையில் இது அமையும். படுக்கையில் இருந்து பிரித்தல் இது உளவியல் ரீதியான ...

  • 22 December

    விபச்சாரக் குற்றமும் நான்கு சாட்சியமும்.

    அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் : விபச்சாரக் குற்றமும் நான்கு சாட்சியமும். “உங்கள் பெண்களில் எவரேனும் மானக் கேடான செயலைச் செய்துவிட்டால் அவர்களின் மீது (அதை நிரூபிக்க) உங்களில் நான்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை, அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.” (4:15) இந்த வசனத்தின் முதல் பகுதி விபச்சாரக் குற்றத்தை நிரூபிப்பதற்கு நான்கு சாட்சிகள் தேவை என்கின்றது. அந்நான்கு சாட்சிகளும் தவறை நேரடியாகக் கண்டவர்களாகவும் இருக்க வேண்டும். ...

  • 13 December

    குழந்தையின் நடத்தை பிறழ்வுகள்; காரணங்களும் தீர்வுகளும்.- 02

    இஸ்லாமானது கனவர் மனைவி கடமைகளையும் உரிமைளையும் போதிய வழிகளையும் முள்வைத்துள்ளது. அவற்றில் சில, மனைவி நல்ல விடயங்களில் கவனுக்காகக் கட்டுப்படல்: “நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை பெண்கள் ஒன்று சேர்ந்து அவர்களில் ஒருவரை நபியவர்களிடம் அனுப்பி வைத்தனர். அப்பெண் நபியவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் பெண்களின் சார்பாக உங்களிடம் வந்துள்ளேன். ஜிஹாதானது ஆண்கள் மீது அலலாஹ் கடமையாக்கியுள்ளான். அவர்கள் அதில் காயப்பட்டால் கூலி கொடுக்கப்படுவார்கள் அதில் அவர்கள் கொல்லப்பட்டால் (ஷஹிதாக்கப்பட்டால்) அல்லாஹற்விடம் உயிரோடிருப்பர் உணவும் அளிக்கப்படுவார்கள். நாங்கள் அவர்களுக்காக உழைக்கின்றோம். நாம் அந்த ...

  • 6 December

    குழந்தையின் நடத்தை பிறழ்வுகள்; காரணங்களும் தீர்வுகளும்.- 01

    குழந்தையின் நடத்தை பிறழ்வுகள்; காரணங்களும் தீர்வுகளும்.- 01 ஆக்கம்: எம்.ஐ. ஹுர்ரா பின்து இஸ்மாயில் ஸலபி (மகளின் ஆக்கம்) பீடிகை குழப்பங்கள் நிறைந்த இந்த சமூக சூழலில் குழந்தைகளை நடத்தை பிறழ்வுக்கு இட்டுச் செல்லும் காரணங்கள் அதிகரித்துள்ளன. சகல திக்குகளில் இருந்தும் அவர்கள் தீமையின் பால் ஈர்க்கப்படுகின்றனர். குழந்தைகளை வழிநடத்துபவர்கள் தமது பொறுப்பையும் அமானிதத்தையும் புரிந்து குழந்தைகளின் நெறிபிறழ்வுக்கான காரணங்களையும் அவற்றைக் களையும் வழிமுறைகளையும் அவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் விதத்தையும் தெளிந்த சிந்தனையுடன் அறிந்திருக்காவிட்டால் குழந்தைகள் சமூகத்தில் குற்றவாளிகளாகவும் குழப்பக்காரர்களாகவும் அழிந்து போகும் அடுத்த ...

November, 2018

  • 24 November

    அநாதைகளின் சொத்துக்களை உண்பது நெருப்பை உண்பதாகும் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்.

    அநாதைகளின் சொத்துக்களை உண்பது நெருப்பை உண்பதாகும் اِنَّ الَّذِيْنَ يَاكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا‌ وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا‏ ‘நிச்சயமாக எவர்கள் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்ணுகிறார் களோ, அவர்கள் தமது வயிறுகளில் நெருப்பையே உண்கின்றனர். அவர்கள் சுட்டெரிக்கும் நரகத்தில் நுழைவார்கள்.’ (4:10) அநாதைகளின் சொத்துக்களை உண்பவர்கள் தமது வயிற்றில் நெருப்பைத்தான் கொட்டிக் கொள்கின்றனர். மறுமையில் அவர்கள் நரகம் செல்வார்கள் என இந்த வசனம் கண்டிக்கின்றது. ‘அநாதைகளின் சொத்துக்களை உண்பது’ என்ற வார்த்தைதான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வேறு ...

  • 23 November

    இஸ்லாமிய திருமணத்தில் பெண்ணிற்கு வலி (பொறுப்பாளர்) | Article 📖

    பெண் திருமணம் செய்வதாக இருந்தால் அவள் சார்பில் ஒரு ‘வலி’ – பொறுப்பாளர் அவசியமாகும். இதுதான் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். ஹனபி மத்ஹப் சார்ந்தவர்கள் இதற்கு மாற்றமாக ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளனர். இந்தக் கருத்து வலுக்குன்றிய ‘ஷாத்’ – (அரிதான) கருத்தாகும். இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட சீர் திருத்தத்தில் பெண்ணுக்கு ‘வலி’ அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை நிலைநாட்ட சிலர் முயற்சிக்கின்றனர். சீர்திருத்தம் என்றால் பிழையை சரியாக்க வேண்டும். பாதிப்புள்ள சட்டத்தை மாற்றி ...

  • 8 November

    திருமண வயதெல்லை┇கட்டுரை.

    இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தம் என எண்ணுகின்றேன். முஸ்லிம் ஆண்-பெண் இருவரினதும் திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். ஏற்கனவே இருந்த சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் பெண் 14 வயதைத் தாண்டினால் மணம் முடிக்கலாம் என்ற நிலை இருந்தது. தற்போது ஒரு சாரார் ...

  • 2 November

    அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.

    05. அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் ஏன் அனுமதியளித்தது! பலதார மணம் புரிந்து நீதமாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால் ஒரு மனைவியுடன் அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட உங்கள் அடிமைப் பெண்களுடன் போதுமாக்கிக் கொள்ளுங்கள் என 4:3 ஆம் வசனம் கூறுகின்றது. அடிமைப் பெண்களை மிருகங்களாக நடத்தும் வழிமுறையும் அவர்களைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்தும் நடைமுறையும் காலா காலமாக இருந்து வந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை அடிமைகள் இவ்வாறுதான் நடத்தப்பட்டு வந்தனர். இஸ்லாம் இந்த அடிமைகள் விடயத்தில் சீர்திருத்தங்களைக் ...

July, 2018

  • 2 July

    முஸ்லிம் பெண்களின் ஆடை அடிப்படை வாதத்தின் அடையாளமா?

    முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, பர்தா போன்ற ஆடை அமைப்பு அடிப்படைவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த ஆடை முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. இப்போது ஏன் இப்படி அணிகின்றனர் என்று கேட்கின்றனர். ஒருவர் அணியும் ஆடையை வைத்து அடிப்படை வாதத்தைத் தீர்மானிக்க முடியுமா? முப்பது வருடங்களுக்கு முன் நாம் இப்படி ஆடை அணியாவிட்டால் இப்போது அணியக் கூடாதா? இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ் பெண்கள் இப்போது அணியும் ஆடையைத்தான் முப்பது வருடங்களுக்கு முன்னரும் அணிந்தார்களா? குறிப்பிட்ட சில காலங்களுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட ...

May, 2018

  • 17 May

    கூரையை எரித்து குளிர் காய முடியாது.

    ‘வரம்பு மீறிச் செல்பவர்கள் அழிந்து போவார்கள்’ என நபி(ச) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம்) எதிலும் எல்லை மீறிச் செல்லக் கூடாது என்பது இஸ்லாத்தின் போதனையாகும். முஸ்லிம் உம்மத்தை அல் குர்ஆன் நடுநிலைச் சமுதாயம் என்று அழைக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் சத்திய வழிக்கு எமக்கு எப்படி சாட்சியாளர்களாகத் திகழ்கின்றார்களோ அதே போல் ஏனைய சமூகத்திற்கு முஸ்லிம் சமூகம் சாட்சியாகத் திகழ வேண்டும் என்பது குர்ஆனின் கூற்றாகும். இன்று முஸ்லிம் சமூகத்தின் மதிப்பையும் மானத்தையும் முஸ்லிம்களே அழித்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் சமூகத்திற்கும் சமயத்திற்கும் தலை ...