முஸ்லிம் உலகு

November, 2014

  • 1 November

    காஸா – இரத்தம் சிந்தும் பூமி

    புனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி வாழ்ந்த இஸ்ரேலியர்களைக் குடியமர்த்தி இஸ்ரேல் எனும் சட்டவிரோத தேசத்தை உருவாக்கினர். இதற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் ஒத்து ஊதின. இன்றைய இஸ்ரேலின் குடிமக்களில் 80 சதவீதமானோர் வந்தேறு குடிகளாவர் இதனால் பலஸ்தீனர்களின் பூமி பறிபோனது. அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல் உயிர்களும் பறிக்கப்பட்டு வருகின்றன. வளைகுடாப் பிராந்தியத்தில் எந்தவொரு முஸ்லிம் நாடும் பலம் பெற்றுவிடக் கூடாது என்பது இஸ்ரேலின் இலட்சிய இலக்காகும். அண்மைக் காலமாக ...

  • 1 November

    ஈமானிய உறுதியுடன் எதிர்கொள்வோம் (தலையங்கம் – இலங்கை விவகாரம்)

    இலங்கை ஒரு அழகான பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த தீவு. இங்கு வாழும் மக்களும் பொதுவான மனித இயல்புகளில் முன்னேற்றம் கண்டவர்கள். இந்த அழகிய தேசத்தை மொழிவெறியும், இனவெறியும் சேர்ந்து இரத்தம் சிந்தும் பூமியாக மாற்றியது. வாகனங்களுக்கு சிங்கள மொழியில்தான் ‘ஸ்ரீ’ போட வேண்டும் எனப் பெரும்பான்மை இனத்தவர்களும், நாம் தமிழில்தான் போடுவோம் என தமிழர்களும் பிடிவாதமாக இருந்தனர். இதற்காக இந்த இலங்கை நாட்டின் மைந்தர்கள் பலர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இப்படி மொழிவெறி பேசிய ஒருகாலம் இருந்தது. பலரது உயிர்களைக் காவுகொண்ட அந்த ...

  • 1 November

    எரியும் விலையேற்றத்தால் எரியும் வயிறுகள்

    இலங்கை அரசு என்றுமில்லாதவாறு வெளிநாடுகளின் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நேரத்தில் உள்நாட்டிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென அறிவிக்கப்பட் எரிபொருட்களின் விலையேற்றம் சாதாரண மக்களைக் கதிகலங்கச் செய்துள்ளது. இந்த விலையேற்றத்துடன் மின்சாரக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் பொருளாதார நெருக்கடி நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விலையேற்றங்கள் இத்துடன் நிற்கப்போவதில்லை. எரிபொருள் விலையேற்றத்தைக் காரணம் காட்டி பாண், அரிசி, போன்றவற்றின் விலைகளையும் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன. பொருட்களை இடம் மாற்றும் செலவு அதிகரிப்பதால், எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரிக்கவே செய்யும். ...

  • 1 November

    ஆயுதக் குழு பூச்சாண்டி

    இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அலவி மௌலானா வித்தியாசமானவர். ஆழ்ந்த அனுபவமும், சமூகப்பற்றுமிக்கவராகவும் மதிக்கப்பட்டு வருபவர். ஏனைய அரசியல்வாதிகளை அரசியல்வாதிகளாகவே பார்த்து வந்த பொதுமக்களில் சிலர் அலவி மௌலானாவை ஆன்மீகத் தலைவர் போன்று மதித்து வந்தனர். மார்க்கப்பற்றுமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர். பொதுமாக்களால் மொளலானா, மௌலானா என அன்பாக அழைக்கப்படுபவர். இவர் அண்மையில் வெளியிட்ட சமூகத்துரோகக் கருத்துக்களால் பொதுமக்களின் வெறுப்பையும், அதிருப்தியையும் சந்திக்க ஆரம்பித்துள்ளார். செத்துக் கொண்டிருக்கும் தமது அசத்தியக் கருத்துக்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அண்மைக் காலமாகச் சில கயவர்கள் தமக்கு மாற்றுக் ...

  • 1 November

    ஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா

    ஈராக்கில் இரத்தம் குடித்து வந்த அமெரிக்க அரக்கர்கள் இம்மாத இறுதிக்குள் ஈராக்கை விட்டும் வெளியேறுகின்றனர். சதாம் ஹுஸைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற பொய்யைச் சொல்லி 2003 இல் ஈராக் மீதான போரைத் துவக்கியவர்கள் ஒன்பது ஆண்டு கொடூரத்திற்குப் பின்னர் வெளியேறுகின்றனர். இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஈராக்கிற்கு எதிரான போர், அங்கே மீறப்பட்ட யுத்த தர்மங்கள், மனித உரிமை ...

October, 2014

  • 31 October

    அடிமேல் அடித்தால் அமெரிக்காவும் அதிரும்

    சர்வதேச சண்டியன் அமெரிக்காவிற்கு இது இறங்கு முகம். தொடர்ச்சியாக சில அதிர்ச்சி வைத்தியங்களுக்கு உள்ளாகி அதிர்ந்து போயுள்ளது. ஈராக் ஆப்கானில் பட்ட அடியில் வாடி வதங்கியுள்ளது. அதன் பொருளாதாரம் சரசரவென சரிந்துள்ளது. இது ஒரு பேரிடியாகும். ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவ மாட்டார்கள்’ என்று கூறுவார்கள். ஈராக் மற்றும் ஆப்கானில் பட்ட அடியால் படித்த பாடத்தின் காரணமாகத்தான் லிபியாவில் நேரடியாக மூக்கை நுழைக்காமல் கொல்லைப் புற வழியாகத் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையில் பலஸ்தீனத்திற்குத் ...

  • 31 October

    மாமிச உணவு மனித இனத்திற்கு எதிரானதா?

    இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சில குழுக்கள் மாமிச உணவுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றன. இறைச்சிக்காக விலங்குகளை அறுப்பதும், கொல்வதும் கூடாது என்பது இவர்களின் கொள்கையாகும். ஏனினும், இது கொள்கைக்காக எழும் பிராச்சாரமாக இல்லாமல் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் எதிர்ப்பதற்கான ஒரு ஊடகமாகவே பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவிலே RSS போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்கள் மாடு அறுக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இறந்த மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த சில தாழ்த்தப்பட்ட மக்களை பசுவின் மீது கொண்ட பக்தியால் இவர்கள் அடித்தே கொலை ...

  • 28 October

    மேற்கின் கழுகுப் பிடிக்குள் லிபியா!

    லிபியா ஒரு இஸ்லாமிய நாடு! போராட்டக் குணம் கொண்ட நாடு! இத்தாலியின் அடக்குமுறைக்கு எதிராக உமர் முக்தாரின் தலைமையில் வீரியம் மிக்க சுதந்திரப் போராட்டம் நடத்திச் சாதனை படைத்த நாடு! சர்வாதிகாரி முஸோலினியின் அதிகாரக் கனவை ஆட்டங்காணச் செய்த உயிரோட்டம் மிக்க சுதந்திரப் போராளிகளைப் பெற்றெடுத்த நாடு! வீரம் விளைந்த மண்! கடந்த 42 வருடங்களாக லிபியாவை ஆட்சி செய்யும் கேர்னல் கடாபி அமெரிக்க எதிர்ப்புக் கோசமொன்றை மட்டும் முன்வைத்துப் பாமர முஸ்லிம்களுக்கு மத்தியில் தன்னை ஹீரோவாகக் காட்டிக் கொண்டவர். இவர் அமெரிக்க எதிர்ப்பாளர். ...