பொதுவானவை

March, 2016

  • 12 March

    இஸ்லாமிய நட்பு | பறகஹதெனிய.

    24/02/2016 தினத்தன்று பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாயலில் மஃரிப் தொழுகையின் பின் நடைபெறும் வாராந்த (ஒவ்வொரு புதன்கிழமையில்) அல்குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பில் அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி அவர்களால் “இஸ்லாமிய நட்பு” எனும் தலைப்பில் ஆற்றிய உரை.

January, 2016

  • 10 January

    போதையில்லாத உலகம் காண்போம்

    போதையில்லாத உலகம் காண்போம் போதைவஸ்துப் பாவனை இன்றைய உலகை அழிவின் விளிம்பை நோக்கி அழைத்துச் செல்கின்றது. இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பாதாள உலக சாம்ராஜ்யத்தின் வருமானத்திற்கான வழியாகவும் இது அமைந்துள்ளது. உலகை அழிவிலும், இழிவிலும் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் அரச அங்கீகாரம் பெற்ற, பெறாத அனைத்துவகை போதை பாவனைகளும் முற்றாகத் தடுக்கப்பட வேண்டும். போதை பாவனை என்றதும் எவரும் எடுத்த எடுப்பிலேயே சாராயத்தையோ, ஹெரோயினையோ பாவிக்கப் போவதில்லை. சிகரட், பான்பராக் போன்ற தீய பழக்கங்கள் ஊடாகத்தான் போதையின் பக்கம் இன்றைய சமூகம் ...

  • 7 January

    நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும்

    நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும் பிரிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த சமூக அமைப்பில் இஸ்லாமிய அகீதா போதிக்கப்பட்ட பின்னர் அந்த சமூகம் சகோதரத்துவ சமூகமாக மாறியது. ‘நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். மேலும் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்தபோது உங்களது உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி, அவனது அருளினால் நீங்கள் சகோதரர்களாக மாறியதையும், நீங்கள் நரகக் குழியின் விளிம்பில் இருந்த போது, அதைவிட்டும் உங்களை அவன் காப்பாற்றி, உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடையை நினைவு கூருங்கள். நீங்கள் நேர்வழி ...

  • 4 January

    மாற்றத்தை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம்!

    மாற்றத்தை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம்! இஸ்லாம் கற்றலையும் கற்பித்தலையும் போற்றும் மார்க்கமாகும். இஸ்லாம் கல்விக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை வேறு எந்த சமயமும் வழங்கியிருக்காது என்று அடித்துக் கூறலாம். அந்தளவுக்கு இஸ்லாம் கல்வியை வலியுறுத்துகின்றது. இஸ்லாத்தின் தூது கூட ‘இக்ரஃ” – ஓதுவீராக!, படிப்பீராக! என்றுதான் ஆரம்பமானது. நபியவர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப ஐந்து வசனங்களிலும் வாசிப்பு, கற்றல், கற்பித்தல், பேனை போன்ற கற்றல் கற்பித்தலின் அடிப்படை அம்சங்கள் பேசப்பட்டுள்ளன. எனவே, இஸ்லாம் அறிவியல் எழுச்சி மூலமாக ஒரு சமூக மாற்றத்தை உருவாக்க விரும்பும் ...

October, 2015

  • 12 October

    அவர்கள் மூட்டுகின்றார்கள்…. நாம் எரிகின்றோம்!

        சிரியாவில் கடந்த சில வருடங்களாகவே பெரும் மனித அவலங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கற்பழிப்புக்கள், கூட்டுப் படுகொலைகள், சிறுவர் மற்றும் சிறுமியர் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், சித்திரவதைகள், இரசாயன ஆயுதப் பாவனை என ஈனத்தனமான கொடூரங்களை ஆஸாத்தின் இராணுவ மிருகங்கள் நிகழ்த்தி வருகின்றன. இந்தக் கொடூரங்களின் விளைவால் பாரிய உள்நாட்டுப் போர் வெடித்து சிரியா சிதறிப் போயுள்ளது. சிரியாவின் சிறுவர்கள் மீது இரசாயனம் பாவிக்கப்பட்ட போது அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் கொஞ்சம் கொதித்து விட்டு அப்படியே அடங்கிப் போயின. சிரியாவின் கொடூரங்களுக்குப் பின்னால் ...

September, 2015

  • 22 September

    இலங்கை தேர்தல் உணர்த்தும் படிப்பினைகள்

    அமைதியான ஒரு தேர்தலை இலங்கை வரலாறு அண்மையில் சந்தித்தது. ஆரவாரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் மற்றும் அடாவடித்தனங்கள் இல்லாமல் பலரையும் வியக்கவைக்கும் விதத்தில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் சிறுபான்மை சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு பெரிதும் மனநிம்மதியைக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது. சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்து வந்த பிரச்சினைகள் ஓரளவு ஓய்ந்தது போன்ற உணர்வை முஸ்லிம்கள் பெற்றுள்ளனர். இறுகிப் போன உள்ளங்கள் இளகி நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளன. முஸ்லிம்களின் மனதை ஆட்கொண்டிருந்த அச்ச உணர்வுகள் அகல ஆரம்பித்துள்ளன. ...

June, 2015

April, 2015

  • 6 April

    பொறுமையின் பெறுமை

    குர்ஆன் கூறும் பொன்னான போதனைகளில் பொறுமையும் ஒன்றாகும். பொறுமையைப் போதிப்பது எளிதானது. ஆனால், நடைமுறையில் அதை கடைப்பிடித்துக் காட்டுவதே கடினமானதாகும். நபியவர்கள் பொறுமையின் பொக்கிஷமாக வாழ்ந்து எமக்கு வழிகாட்டியுள்ளார்கள். பொறுமையின் பெருமை குறித்தும் அதை எப்படி ஏற்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் சற்று நோக்குவோம். பொறுமையின் பெருமை: அல்குர்ஆனில் பல வசனங்கள் நபி(ச) அவர்களை விளித்து பொறுமையைப் போதிக்கின்றது. ‘(நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக! உமது பொறுமை அல்லாஹ்வுக்கே அன்றி வேறில்லை. அவர்களுக்காக நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் சூழ்ச்சி செய்வதன் காரணமாக ...

March, 2015