தப்ஸீர்

December, 2018

  • 22 December

    விபச்சாரக் குற்றமும் நான்கு சாட்சியமும்.

    அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் : விபச்சாரக் குற்றமும் நான்கு சாட்சியமும். “உங்கள் பெண்களில் எவரேனும் மானக் கேடான செயலைச் செய்துவிட்டால் அவர்களின் மீது (அதை நிரூபிக்க) உங்களில் நான்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை, அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.” (4:15) இந்த வசனத்தின் முதல் பகுதி விபச்சாரக் குற்றத்தை நிரூபிப்பதற்கு நான்கு சாட்சிகள் தேவை என்கின்றது. அந்நான்கு சாட்சிகளும் தவறை நேரடியாகக் கண்டவர்களாகவும் இருக்க வேண்டும். ...

July, 2018

  • 26 July

    பொறுமையும்… உறுதியும்… [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 23]

    لَـتُبْلَوُنَّ فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏ ‘நிச்சயமாக நீங்கள் உங்களது செல்வங் களிலும் உங்கள் உயிர்களிலும் சோதிக்கப் படுவீர்கள். இன்னும் உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப் பட்டோரிடமிருந்தும் இணைவைத்தோரிடமிருந்தும் அதிகமான நிந்தனை(வார்த்தை)களையும் நீங்கள் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் நிச்சயமாக அது உறுதிமிக்க காரியங் களில் உள்ளதாகும்.’ (3:186) உங்கள் செல்வங்கள், உயிர்களில் ...

  • 23 July

    ஸகாத்தும்… சேமிப்பும்… [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புகள்-22]

    ஸகாத்தும் சேமிப்பும்: وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِه هُوَ خَيْـرًا لَّهُمْ‌ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِه يَوْمَ الْقِيٰمَةِ  وَ لِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ ‘அல்லாஹ் தனது அருட்கொடையிலிருந்து அவர்களுக்கு வழங்கியவற்றில் கஞ்சத்தனம் செய்வோர் அது தங்களுக்கு நல்லது என்று எண்ண வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீயதே! எதை அவர்கள் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவை அவர்களுக்கு மறுமை நாளில் கழுத்தில் வளையங்களாக ...

  • 22 July

    செழிப்புடன் வாழும் இறை நிராகரிப்பாளர்கள் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 21]

    وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِىْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِم اِنَّمَا نُمْلِىْ لَهُمْ لِيَزْدَادُوْۤا اِثْمًا‌ ۚ وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏ ‘மேலும், அவர்களை நாம் (உடனுக்குடன் தண்டிக்காது) விட்டு வைப்பது தங்களுக்கு நல்லது என நிராகரிப்போர் எண்ண வேண்டாம். நாம் அவர்களை விட்டு வைத்திருப்பதெல்லாம் பாவத்தை அவர்கள் அதிகரித்துக் கொள்வதற்கே. மேலும் அவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு. ‘ (3:178) முஸ்லிம்கள் உலகில் செழிப்பாக வாழ வேண்டும், காபிர்கள் அழிய வேண்டும் என எம்மில் சிலர் நினைக்கலாம். ஆனால், அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு ...

  • 22 July

    பிரித்துக் காட்டப்பட்ட முனாபிக்குகள் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 20]

    مَا كَانَ اللّٰهُ لِيَذَرَ الْمُؤْمِنِيْنَ عَلٰى مَاۤ اَنْـتُمْ عَلَيْهِ حَتّٰى يَمِيْزَ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ وَمَا كَانَ اللّٰهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَ لٰكِنَّ اللّٰهَ يَجْتَبِىْ مِنْ رُّسُلِه مَنْ يَّشَآءُ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِه‌ۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَـكُمْ اَجْرٌ عَظِيْمٌ‏ ‘நல்லவரிலிருந்து தீயவரை பிரித்தறியும் வரை நீங்கள் இருக்கின்ற இதே நிலையில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களை விட்டு விடுபவனாக இல்லை. மேலும், மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தருபவனாக இல்லை. எனினும், அல்லாஹ் தனது ...

  • 10 July

    அல்லாஹ்வை மனிதனுடன் ஒப்பிட்டு நோக்குவது [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 19]

    அல்லாஹ்வை மனிதனுடன் ஒப்பிட்டு நோக்குவது: لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ فَقِيْرٌ وَّنَحْنُ اَغْنِيَآءُ ‌ۘ سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ  وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ‏ ‘நிச்சயமாக அல்லாஹ் ஏழை. நாங்கள் செல்வந்தர்கள்’ என்று கூறியவர்களின் வார்த்தையை அல்லாஹ் செவியேற்று விட்டான். அவர்கள் கூறியவற்றையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்வோம். மேலும், (மறுமையில்) ‘சுட்டெரிக்கும் வேதனையை சுவையுங்கள்!’ என்றும் கூறுவோம்.’ (3:181) அல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுப்பவர் யார்? ...

May, 2018

  • 23 May

    தலைமைத்துவப் பண்பு | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 18.

    ‘(நபியே!) அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் விலகிச் சென்றிருப்பார்கள். எனவே, அவர்களை நீர் மன்னித்து, அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடி, காரியங்களில் அவர்களுடன் ஆலோசனையும் செய்வீராக! நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) முழுமையாக நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்.’ (3:159) இந்த வசனம் நபி(ச) அவர்களின் சிறப்பியல்புகளைக் காட்டுகின்றது. நபி(ச) அவர்கள் மென்மைப் போக்குள்ளவர்களாக ...

April, 2018

  • 15 April

    வேதனையை உணரும் தோல் | ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (18).

    அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (18) ”VEDANAIYAI UNARUM THOL” AL QURAN TAFHSEER CLASS (18) (SURHA AN NISA EXPLANATION) BY ASHSHK S.H.M ISMAIL SALAFI @JTJM PARAGAHADENIYA 11/04/2018. 

  • 7 April

    ஈஸா நபி மரணித்துவிட்டார்களா? | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 17

    ‘முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவர் மரணித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் வந்தவழியில் புறமுதுகிட்டுச் சென்று விடுவீர்களா? எவன், தான் வந்த வழியே புறமுதுகிட்டுச் சென்று விடுகின்றானோ, அவன் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் விரைவில் கூலி வழங்குவான். ‘ (3:144) உஹதுப் போரின் போது முஹம்மது நபி கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்ட போது நபித்தோழர்களில் சிலர் நிலை தடுமாற்றம் அடைந் தார்கள். இதைக் குறித்தே இந்த வசனம் ...

  • 4 April

    நபிக்கு அதிகாரத்தில் பங்கில்லை | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 16.

    ‘(நபியே!) அதிகாரத்தில் உமக்கு யாதொரு பங்கும் இல்லை. (அல்லாஹ்) அவர்களுக்கு மன்னிப்பு வழங்கலாம் அல்லது நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்கள் என்பதால் அவன் அவர்களைத் தண்டிக்கலாம்.’ (3:128) உஹதுப் போரில் நபி(ச) அவர்களின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர்களது முகத்தில் இரத்தம் கசிந்தது. அப்போது, ‘தங்கள் நபியைக் காயப்படுத்திய ஒரு சமூகம் எப்படி வெற்றி பெறும் என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள். அப்போதுதான் மேற்படி வசனமும் அருளப்பட்டது.’ (முஸ்லிம்: 1791-104) இந்த வசனத்தின் மூலம் இஸ்லாத்தின் ஏகத்துவத்தின் உண்மை நிலை உணர்த்தப் படுகின்றது. அதிகாரத்தில் ...