கட்டுரைகள்

October, 2014

  • 27 October

    குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-2)

    கத்னாச் செய்தல்: ஆண் குழந்தைகளுக்கு ‘கத்னா’ செய்வது குழந்தையின் ஆன்மீகத்திற்கும், ஆண்மைக்கும், ஆரோக்கியத்திற்கும் ஊக்கமளிக்கும் ஒரு முக்கிய ஸுன்னாவாகும். ஆண்களுக்குப் போன்று பெண் பிள்ளையின் ‘கத்னா’ அவசியப்படுத்தப்படவில்லை. ஆனால் பெரும் தடை என்று கூறுவதற்கும் இல்லை. சில நாடுகளில் பெண் பிள்ளைகளுக்குக் கூடப் பத்து வயது தாண்டிய பின்னர் ‘கத்னா’ச் செய்யும் வழக்கமுள்ளது. இதனால் சிலபோது பாரிய பாதிப்புக்களும் ஏற்படுகின்றன. இந்நடைமுறைகள் நமது நாட்டில் இல்லை என்பது திருப்தி தரும் அம்சமாகும். முன்னைய காலங்களில் ஆண் பிள்ளைகளுக்குச் செய்யும் ‘கத்னா’வையும் ‘ஸுன்னத்துக் கலியாணம்’ என்ற ...

  • 27 October

    குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-1)

    இஸ்லாமிய நெறியில் குழந்தை வளர்ப்பு எனும் போது அவர்களது லௌகீக நலன் நாடிய ஆளுமைகள் மட்டுமன்றி, அவர்களின் ‘ஹிதாயத்’ எனும் ஆன்மிக ஆளுமை விருத்தியும் நோக்கமாகக் கொள்ளப்படும். இந்த வகையில் குழந்தைகளின் ஆன்மிக-லௌகீக முன்னேற்றத்திற்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அதற்காக அவர்கள் காட்டிய வழிமுறைகளை இங்கே சுருக்கமாகத் தொகுத்துத் தர விரும்புகின்றோம். 1. பிரார்த்தனை: நபி(ஸல்) அவர்கள் தமது எதிரிகளின் குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்காகக் கூடப் பிரார்த்தனை செய்துள்ளார்கள். இது எதிர்கால சந்ததிகளின் சீர்திருத்தத்திற்கு அவர்கள் வழங்கிய முக்கியத்துவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ...

  • 27 October

    பித்அத்தின் வகைகள் (பகுதி-2)

    பித்அத் ஹகீகிய்யா; பித்ஆ இழாபிய்யா ‘பித்அத்’ என்பது மார்க்கத்தில் புதிதாக நுழைவிக்கப்பட்ட அம்சமாகும். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் மார்க்கத்தின் பெயரில் உருவான ஆதாரமற்ற அனைத்து வழிபாடுகளும், கொள்கைகளும் பித்அத்துகளாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். எனினும் பித்அத்தில் அதன் தன்மைக்கு ஏற்பவும், அதன் பாரதூரத்திற்கு ஏற்பவும் பல வகைகள் உள்ளன. எத்தனை வகைகள் இருந்தாலும் அத்தனையும் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மேலதிகத் தெளிவுக்காகவும், எமது சகோதரர்கள் ‘பித்அத் கூடாது!’ என்றதும், ‘பித்அத்தில் எத்தனை வகைகள் உள்ளன ...

  • 27 October

    பித்அத்தின் வகைகள் (பகுதி-1)

    கொள்கை சார்ந்த பித்அத்துகள்: மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து பித்அத்துகளும் வழிகேடுகள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் பித்அத் பற்றிப் பேசும் எமது சகோதரர்கள் பித்அத் பற்றி விரிவான விளக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். ஏனெனில் பித்அத்தை விட்டும் விலக வேண்டும் என்பதை எமது சகோதரர்கள் விளங்கியுள்ளனர். எனினும் இபாதத் சார்ந்த பித்அத் விடயத்தில் மட்டும் தான் இந்தத் தெளிவு எமது சகோதரர்களிடம் இருக்கின்றது. கொள்கை சார்ந்த பித்அத் பற்றிய விழிப்புணர்வோ, வெறுப்புணர்வோ எம்மிடம் போதியளவு இல்லாமல் ...

  • 27 October

    அச்சமூட்டும் இயற்கைச் சூழ்நிலை

    டிசம்பர் 26 மறக்க முடியாத தினம்! இலட்சக்கணக்கான உயிர்களைக் குடித்துக் கோடிக்கணக்கான சொத்துகளைக் காவு கொண்ட தினம்! பூவுக்குள் பூகம்பம் போன்று நீருக்குள் இவ்வளவு ஆக்ரோஷமா? தண்ணீருக்கு இப்படியொரு சக்தியா? எனத் திறந்த விழிகளை மூடாமல் மக்களை அதிர வைத்த தினம்! ஆறு வருடங்கள் உருண்டோடி விட்டாலும் டிசம்பர் வரும் போது கடலோரப் பிரதேச மக்களைச் சுனாமி அச்சம் தொற்றிக்கொள்கின்றது.  குறிப்பாக இந்த ஆண்டு பெய்த தொடர் மழை, கடலில் ஏற்பட்டதாகக் கூறப்படும் மாற்றங்கள் சுனாமி அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன. சுனாமி வருமோ இல்லையோ ...

  • 27 October

    பித்அத் தவிர்ப்போம்!

    “அஹ்லுஸ் ஸுன்னா”, “பிர்கதுன்னாஜியா” (வெற்றி பெற்ற பிரிவினர்), அத்தாயிபதுல் மன்ஸூரா (உதவி செய்யப்படும் குழுவினர்) என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் சுவனம் செல்லும் பிரிவினரின் பண்புகளில் பித்அத்தை விட்டும் விலகியிருப்பதும் ஒன்றாகும். பித்அத்தைத் தவிர்ப்பதும், அதை எதிர்ப்பதும் அஹ்லுஸ் ஸுன்னாவின் பண்பாகும். பித்அத்: “பித்அத்” என்பது ஓர் அறபுப் பதமாகும். “பதஅ” என்ற வினைச் சொல்லிலிருந்து இது உருவானதாகும். புதியது, முன்னுதாரணமின்றித் தோற்றுவிக்கப்பட்டது என்பன இதன் பாஷை ரீதியான அர்த்தங்களாகும். “வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது என்ப தையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ...

  • 27 October

    ஹஜ்-உம்றா திக்ருகள்

    உம்றாவுக்குச் செல்பவர் குறித்த எல்லையில் இஹ்றாம் அணிந்து.. لَبَّيْكَ عُمْرَةً என்று கூறிக்கொள்ள வேண்டும். ஏதேனும் நோய் ஆபத்து நேரலாம் எனப் பயந்தால் اللَّهُمَّ مَحِلِّي حَيْثُ حَبَسْتَنِي என்று கூறிக்கொள்ள வேண்டும். ‘யா அல்லாஹ்! நீ எந்த இடத்தில் என்னைத் தடுக்கின்றாயோ அதிலே நான் இஹ்றாம் களையும் இடமாகும் என்பது இதன் அர்த்தமாகும். இப்படிக் கூறியவர் ஏதேனும் காரணத்தால் உம்றாவை நிறைவேற்ற முடியாது போனால் அவர் தெண்டப் பரிகாரமாக பித்யா செலுத்தத் தேவையில்லை. அதனைத் தொடர்ந்து கஃபதுல்லாஹ்வைக் காணும் வரை ஆண்கள் சத்தமாகப் ...

  • 27 October

    நபியவர்கள் செய்த ஹஜ் – ஓர் நேர்முக வர்ணனை

    நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறையே ஹஜ் செய்துள்ளார்கள். “உங்களது ஹஜ்ஜை என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்!” என்று கூறிய நபியவர்கள், ஹஜ்ஜின் முன்மாதிரியாகத் தன்னையே எடுத்துக்கொள்ள வேண்டுமெனப் பணித்துள்ளார்கள். இந்த வகையில் நபியவர்களின் ஹஜ்ஜைக் கண்ணால் கண்ட ஸஹாபாக்கள் வர்ணிக்கும் ஹதீஸைக் கீழே தருகின்றோம். முஹம்மத் பின் அலீ பின் அல் ஹுசைன் பின் அலீ பின் அபிதூலிப்(ரஹ்) அவர்கள் கூறியதாவது; “ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரழி) அவர்களிடம் நான், “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என்று கேட்டேன். அதற்கு ...

  • 27 October

    கேள்வி-பதில் (ஹஜ் தொடர்பானவை)

    பயண அறிவிப்பு கேள்வி:- ஹஜ்-உம்றாச் செய்யும் ஒருவர் தனது பயணம் குறித்துப் பிறருக்கு அறிவிக்கலாமா? பதில்:- “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்றாவையும் நிறைவு செய்யுங்கள்.” (2:196) மேற்படி வசனத்தில் ஹஜ்ஜையும், உம்றாவையும் அல்லாஹ்வுக்காகச் செய்யுமாறு அல்லாஹ் ஏவுகிறான். ஹஜ்-உம்றாச் செய்வோர் பேருக்காகவோ, புகழுக்காகவோ அல்லது எல்லோரும் செய்கின்றார்கள் என்பதற்காகவோ செய்யக் கூடாது. அல்லாஹ்வுக்காக அவனது திருப்பொருத்தத்தைப் பெறும் நோக்கில் செய்ய வேண்டும். ஹஜ்-உம்றாச் செய்வோரது எண்ணம் தூய்மையானதாக இருக்க வேண்டும். இதே வேளை, ஹஜ் செய்பவர் தான் ஹஜ் செய்யப் போகும் செய்தியைப் பிறருக்குத் தெரிவிப்பதை இஸ்லாம் ...

  • 27 October

    ஹாஜிகளே!, இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்! உள்ளத்தின் கதவுகள் திறக்கட்டும்!

    “ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கலிமா, தொழுகை, நோன்பு என்பன உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்ட வணக்கங்களாகும். “ஸகாத்” பணத்துடன் மட்டும் சம்பந்தப்பட்ட இபாதத்தாகும். ஆனால் ஹஜ் பணத்தாலும், உடலாலும் செய்யப்படும் தியாகமாகும். எனவே ஹஜ் ஏனைய இபாதத்களை விடச் சற்று மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும். ஹஜ் கடமை:- மக்காவுக்குச் சென்று இந்தக் கடமையைச் செய்யத் தக்க பொருள் வளமும், உடல் நலமும் உள்ளவர்கள் மீது கட்டாயமானதாகும். எனவே உலக நாடுகளிலிருந்து இலட்சோப இலட்சம் சக்திபடைத்த முஸ்லிம்கள் சமத்துவமாக, சகோதரத்துவமாக தியாகத்துடன் ஹஜ் கடமைக்காக ...