இரகசியம் பேணுதல்:- நட்பும், அன்பும் நீடிக்க நெருங்கிப் பழகுகின்றவர்களின் இரகசியங்களைப் பேணுவது அவசியமாகும். இரகசியங்களை அம்பலப்படுத்துபவன் மாணத்தை வாங்குபவன் என்று அறிந்துவிட்டால் யாரும் நெருங்கிப் பழக முன் வரமாட்டார்கள். தோழமையுடன், நட்புணர்வுடன் கதைக்க முற்படமாட்டார்கள். இத்தகையவர்கள் அனாவசியமாக அடுத்தவர்களின் பகைமையையும் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும். அப்துர் ரஹ்மான் அஸ்ஸலமீ எனும் அறிஞர் சகோதரர்களின் இரகசியங்களைப் பேணுவது என்பது நட்புறவின் ஒழுங்குகளில் உள்ளதாகும் என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறே மற்றும் சில அறிஞர்கள் நல்லவர்களின் உள்ளங்கள் இரகசியங்களின் புதைகுழிகள் என்று கூறுவர். இரகசியங்கள் சிலரிடம் சொல்லப்பட்டால் அவர்களது ...
கட்டுரைகள்
October, 2014
-
31 October
மக்கள் மனங்களைக் கவர!
அழைப்புப் பணி புரிவோரும், சமூகப் பணி புரிவோரும் மக்களால் நேசிக்கப்பட வேண்டும். தாம் நேசிக்கும் ஒருவரின் கருத்துக்குத்தான் மக்கள் மதிப்பளித்துப் பழக்கப்பட்டுள்ளனர். எனவே பிறர் மீது தனது ஆளுமையைப் பிரயோகிக்க விரும்புபவர் முதலில் அவரால் நேசிக்கப்படக் கூடியவராகத் தன்னை மாற்றிக்கொள்வது அவசியமாகும். இந்த வகையில் மக்கள் மனங்களைக் கவரவும், அவர்களைத் தன் பால் ஈர்த்தெடுக்கவும், அவர்களது நேசத்தைப் பெறவும் இஸ்லாம் காட்டும் சில வழிகாட்டுதல்களைத் தொகுத்து நோக்குவது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என எண்ணுகின்றேன். 1. அல்லாஹ்வின் நேசத்தைப் பெறல்: மக்கள் உங்களை நேசிக்க ...
-
31 October
நபிவழி நடப்போம்!
ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது. “நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…” (33:6) இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும் போது “உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் விட என்னை அதிகமாக நேசிக்காத வரையில் முஃமினாக முடியாது!” எனக் குறிப்பிட்டார்கள். நேசத்தின் வெளிப்பாடு: நபி(ஸல்) அவர்கள் மீது உயர்வான நேசம் எல்லா முஸ்லிம்களிடமும் இருக்கின்றது. ...
-
31 October
பித்அத்தின் தீய விளைவுகள் – 2
(7) மூட நம்பிக்கை சார்ந்த குழப்பங்களில் வீழ்தல்: மார்க்க ரீதியாக எழும் எந்தக் குழப்பமாக இருந்தாலும் அதில் அதிகம் வீழ்பவர்களாக பித்அத்காரர்கள் இருப்பார்கள். “இத்தூதரை அழைப்பதை உங்களுக்கிடையில் சிலர் சிலரை அழைப்பது போன்று ஆக்கிக் கொள்ளாதீர்கள். உங்களில் யார் மறைவாக நழுவிச் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் நன்கறிவான். அவரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ, அல்லது தமக்கு நோவினை தரும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக்கொள்ளட்டும்.” (24:63) பித்அத் செய்வோர் அல்லாஹ்வின் தூதருக்கு எதிராகச் செயற்படுபவர்கள் என்ற அடிப்படையில் பித்னாக்களில் வீழ்ந்து ...
-
31 October
பித்அத்தின் தீய விளைவுகள் – 1
முஸ்லிம் உம்மத்தில் இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய வழிகேடுகளே பித்அத்துகளாகும். இந்த பித்அத்துகளால் பல்வேறுபட்ட பாரதூரமான எதிர்விளைவுகள் உருவாகின்றன. ஆனால், பித்அத்தான விடயங்களைச் சாதாரணமாகக் கருதும் சிலர், அவற்றைச் செய்வதில் பின்னிற்பதில்லை. அது போல், பித்அத் பற்றிப் பேசுபவர்களை சின்னத்தனமாய் நோக்கும் நிலையும் காணப்படுகிறது. எது எவ்வாறாயினும், பித்அத் புரிவோர் பல பாதிப்புகளை சம்பாதிக்கின்றனர் என்பது நபி(ஸல்) அவர்களின் கண்டிப்பான எச்சரிக்கையாகும். அப்பாதிப்புகளை முறையாக உணர்ந்தால்தான் பித்அத் எவ்வளவு பாரதூரமான குற்றம் என்பதை உணரலாம். எனவே பித்அத் ஏற்படுத்தும் தீய விளைவுகள் குறித்து சுருக்கமாகப் புரிந்துகொள்ள முனைவோமாக! ...
-
31 October
அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-7)
மாற்ற வேண்டியது மார்க்கத்தையா? மக்களையா? இப்போது இன்னுமொரு சந்தேகம் எழலாம். தக்பீர் நெஞ்சில் கட்டினால் மக்கள் அடிக்கின்றனர், ஏசுகின்றனர் எனவே இந்த சின்ன விடயத்தை விட்டுக் கொடுக்கலாம் தானே? எங்கே கட்டினால் என்ன? இடத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் என்ன குறைந்தா போகப்போகிறது? இப்படியும் சில அழைப்பாளர்கள் சிந்திக்கலாம். இஸ்லாமிய பிரச்சாரம் என்றால் மார்க்கக் கருத்திற்கேற்ப மக்கள் நடத்தை, சிந்தனை என்பவற்றை மாற்றுவதேயன்றி, மக்கள் நிலைக்கேற்ப மார்க்க முடிவுகளை மாற்றுவதல்ல என்பதை ஒவ்வொரு அழைப்பாளனும் அழுத்தமாக உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய ...
-
31 October
அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-6)
சின்ன விடயங்களைச் சொன்னால் என்ன? அழைப்புப்பணியில் ஈடுபடுவோர் சில்லறை விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்ளக் கூடாது. அடிப்படையையே ஆட்டங்காணச் செய்யும் எத்தனையோ ஓட்டைகள் இருக்கின்றன. அவற்றை அடைக்காமல் சில்லறை விஷயங்களில் மயிர்பிளக்கும் ஆராய்ச்சிக்காக நம் நேரத்தையும் காலத்தையும் விரயமாக்கலாமா? எனவே, அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் தாடி வைத்தல், அத்தஹியாத்தில் விரல் அசைத்தல், தக்பீர் நெஞ்சில் கட்டுதல், கத்தம் பாத்திஹா, கந்தூரி, மீலாது, மவ்லது, ராத்திபு, ஹழரா போன்ற சில்லறை விடயங்கள் பற்றி அலட்டிக் கொள்ளக் கூடாது. இல்லையென்றால் எத்தனையோ பெரிய, பெரிய விடயங்கள் பற்றி ...
-
31 October
அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-5)
கருத்து வேறுபாடுகளைக் கண்டுகொள்ளக் கூடாதா? “பிரச்சாரப் பணி புரிவோர் பிரச்சினைகளை உருவாக்கு பவர்களாக மாறிவிடலாகாது. எனவே “தஃவத்” செய்யும் போது கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் ஒரு “தாயி” தலையிடக் கூடாது. ஏனெனில், கருத்தொருமித்த விடயங்களில் தான் பிரச்சாரம் கடமையாகும். கருத்து வேறுபாட்டிற்குரிய விடயங்களில் தஃவத் என்பது இல்லை. எனவே, சமூகத்திற்கு முரணான விடயங்களை விட்டு விட்டு, சமூகத்திற்கு உடன்பாடான விடயங்களையே நாம் எமது பிரச்சார இலக்காகக் கொள்ள வேண்டும் என சில சகோதர அழைப்பாளர்கள் கருதுகின்றனர். மேற் குறிப்பிட்ட சிந்தனை நம்நாட்டில் கணிசமானவர்களிடம் தாக்கத்தை ...
-
31 October
அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-4)
நளினத்தின் பெயரில் நன்மையை மறைக்கலாமா? அல்லாஹுத் தஆலா பிரச்சாரத்திற்காக நபிமார் களான மூஸா(அலை), ஹாரூன்(அலை) ஆகியோரைப் பிர்அவ்னிடம் அனுப்பும்போது “நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அதனால் அவன் நல்லுணர்ச்சி பெறலாம். அல்லது நடுக்கமடையலாம்” (20:44) எனக் கூறி அனுப்புகின்றான். பிர்அவ்னிடமே நளினமாகப் பேசவேண்டுமென்றால் எமது சமூகத்துடன் நாம் பிரச்சாரத்தில் எவ்வளவு நளினமாக நடக்க வேண்டும் என்பதைச் சிந்திப்பவர்கள் உணரமுடியும். மக்கள் காலம் காலமாக நம்பி நடைமுறைப் படுத்தி வரும் சடங்கு சம்பிரதாயங்களையும், ஷிர்க்கு, பித்அத்துக்களையும் கூடாதவை என பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்வது நளினமான ...
-
28 October
சுனாமியும், அணுக்கசிவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளே!
“” “” “” மார்ச் 11 ஆம் திகதி ஜப்பானை பாரிய பூமியதிர்ச்சியும், சுனாமியும் தாக்கியது. இவற்றின் விளைவாக ஜப்பானின் புகுஷிமா மாகாணத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள டாய்ச்சா அணுமின் நிலையத்தின் குளிரூட்டும் இயந்திரங்கள் செயலிழந்து போக அணு உலைகள் சூடேறி வெடிக்க ஆரம்பித்துள்ளன. சுனாமி தாக்குதல், பூமியதிர்ச்சி என்பன ஜப்பானுக்குப் பழகிப் போன அம்சங்களாகும். ஆனால், ஜப்பானின் அணுக் கசிவு என்பது ஜப்பானை மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ஜப்பானின் அண்டை நாடுகள் பீதியில் உறைந்து போயுள்ளன. “” “” ...